Thursday, February 27, 2014

மோடியால் இப்படியா? இல்லை இப்படி இருப்பதால் மோடி அப்படியா?



1  மகாத்மா காந்தி அக்டோபர் முப்பதாம் நாள் இறந்து போனார்.

2 கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி ஆகியோர் தீவிரவாதிகள்.

3  இந்தியாவிலிருந்து இஸ்லாமாபாத் என்ற நாட்டை பிரித்தார்கள்.

இவையெல்லாம் குஜராத் மாநிலம் வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்கள்.

நரேந்திர மோடி வரலாற்றை தப்பும் தவறுமாக அவ்வப்போது பேசி அம்பலப்பட்டு வருகிறார்.

என் சந்தேகம் என்னவென்றால்

குஜராத் மாநிலத்தில் பாடப்புத்தகங்கள் தப்பும் தவறுமாக இருப்பதால் அதை படித்து விட்டு நரேந்திர மோடி தவறுதலாக உளருகிறாரா?

இல்லை

நரேந்திர மோடியின் உளரல்களுக்கு ஏற்றார்போல பாடப்புத்தகங்களை தவறாக வெளியிடுகிறார்களா?

யார் யாரை கெடுத்தார்கள்?

நரேந்திர மோடியை பாடப்புத்தகங்களா?
இல்லை பாடப் புத்தகங்களை நரேந்திர மோடியா?

No comments:

Post a Comment