Friday, March 14, 2014

அன்னா ஹசாரேவுக்கு பதில் ஒரு அடியாள்

பிரதமர் கனவு கொண்ட மம்தாவின் புது டெல்லி கூட்டம் மிகப் பெரிய
சொதப்பலாகி விட்டது. காந்தி குல்லா போட்ட அன்னா ஹசாரே 
கடைசி நிமிடத்தில் காலை வாரி விட்டதால் காலி நாற்காலிகளோடு
பேசி விட்டு போய் விட்டார்.


ஆனாலும் அவருக்கு ஆறுதல் பரிசு ஒன்று கிடைத்து விட்டது.

பிரதமர் கனவுக்காக எல்லைகளை விரிக்க  ஆசைப்பட்ட  அவருக்கு
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தளபதி கிடைத்து விட்டார்.

அவர்தான் காமேஷ்வர் பைத்தா,



ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து திரிணாமுல் காங்கிரசிற்கு
தாவி விட்டார். கடந்த பதினைந்தாவது மக்களவையில் இவர்
முதலிடம் பெற்றவர். 

ஆமாம்

அதிகபட்ச கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற பெருமை
இவருக்கே உண்டு. கொலை, கொலை முயற்சி, கடத்தல்,
கற்பழிப்பு என நாற்பத்தி ஆறு கிரிமினல் வழக்குகள் அவர் மீது
இருக்கிறது.

மம்தா கட்சியில் சேர்வதற்கு இவரை விட பொருத்தமான நபர்
வேறு யாராவது இருக்கிறார்களா?


 

No comments:

Post a Comment