Sunday, March 23, 2014

பகத்சிங் சுவரொட்டியை கிழித்தெறிந்த தேச துரோக பாஜக

இந்திய சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சங் பரிவாரக் கும்பல்
பாஜக நேற்று அசிங்கமான ஒரு விஷயத்தை சாத்தூரில் செய்துள்ளது.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மகத்தான வீரர்களின் நினைவு நாளை
ஒட்டி விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட  சாத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கீழ்க்காணும் சுவரொட்டியினை ஒட்டியுள்ளார்கள்.


இந்த சுவரொட்டியை பார்த்ததும் பாஜக ஆட்களுக்கு மிளகாயை கடித்தது போல எரிச்சல் ஏற்பட்டு காவல்துறையிடம் புகார் செய்தது மட்டுமல்லாமல்  இரவுக்குள் அத்தனை சுவரொட்டிகளையும் கிழித்து விட்டார்கள்.

இந்த சுவரொட்டியில் என்னய்யா குற்றம் இருக்கிறது?
தியாகிகளின் புகைப்படம் இருக்கிறது,
ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம் என்றிருக்கிறது,
மத வெறியை வேரறுப்போம் என்று இருக்கிறது.

தேசத்துரோகிகளுக்கு மட்டுமே இந்த சுவரொட்டி கடுப்பாக இருக்கும்.
அதனால்தான் பாஜக விற்கு வெறுப்பாக இருக்கிறது.
சகிப்புத்தன்மையற்ற அராஜகவாதிகள் என்று தங்களை மீண்டும்
மீண்டும் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த அசிங்கத்தை நியாயப்படுத்த அனானிகளே வராதீர்கள்,
தொகுதி வேட்பாளர் வைகோ என்ன சொல்கிறார்?

No comments:

Post a Comment