Saturday, March 29, 2014

சிதம்பரம் அண்ணாச்சி, அது உங்களுக்கே டேஞ்சராச்சே?



இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்த கறுப்புப் பணம் பற்றிய விபரங்களைத் தராவிட்டால் நடப்பதே வேறு என்று அண்ணன் சிவகங்கை முன்னாள் சீமான் (அதான் போட்டி போடலியே, இனிமே முன்னாள்தான்) ப.சிதம்பரம் ஸ்விட்சர்லாந்து நாட்டை மிரட்டி கடிதம் எழுதியிருப்பதைக் கண்டு மெய் சிலிர்க்கிறது, உள்ளம் பூரிக்கிறது, இதயம் கனக்கிறது, கண்கள் பனிக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

சாவற நேரத்துல சங்கரா என்பது போல இது என்ன ஆட்சியை விட்டு விட்டு வீட்டுக்கு போகும் நேரத்தில் உங்களுக்கு வீரம் வருகிறது? சரி உங்க லெட்டரைப் பாத்து பயந்து நடுங்கி அவங்க எல்லா விபரத்தையும் கொடுத்துட்டா சிக்கலாச்சே!

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த், ஆதர்ஷ், ஹெலிகாப்டர் என்று எல்லா ஊழல்களிலும் கல்லா கட்டிய காசு ஸ்விஸ் வங்கிகளில்தானே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்! அந்த விபரங்கள் எல்லாம் வெளியே வந்தா உங்காளுங்களுக்கே டேஞ்சராச்சே!

இல்லை வேற நாடுகளில் பதுக்கி வைச்சுட்டாங்களா?
அதான் இவ்வளவு தைரியமா?


1 comment:

  1. கேட்பவனுங்க கேணைங்கன்னா, கேழ்வரகுல நெய் வடியுதுன்னு சொல்வாங்கலாம். அந்த கதை தான் நம்ம சிவகங்கை சீமானின், சாரி -முன்னால் சீமானின் கதை

    ReplyDelete