Sunday, March 16, 2014

சிதம்பரம் அண்ணாச்சி, சும்மா இருக்கீகளா?

வீரத் திலகம் ப.சி அண்ணாச்சி நரேந்திர மோடியிடம் ஒரு கேள்வி
கேட்டுள்ளார்.

ராமர் கோயில்
பொது சிவில் சட்டம்,
அரசியல் பிரிவு 370

ஆகிய மூன்று பிரச்சினைகளைப் பற்றி நரேந்திர மோடி ஏன் வாய்
திறப்பதேயில்லை என்பது அவர் கேள்வி.

இதைப் பத்தி பேசினா விழற ஓட்டு கூட விழாமப் போகும்னு 
அவங்களே பயந்து போய் வாய மூடிக்கிட்டு இருக்காங்க.
இவரு அவங்கள உசுப்பேத்தி விடுறாரு. 

கொஞ்சம் வாய மூடிக்கிட்டு சும்மா இருக்கீகளா?

ஆமாம் திடீருனு சிறுபான்மை மாநாடெல்லாம் நடத்துறீங்க,
உங்களுக்கு சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஷ்ரா கமிட்டி 
பரிந்துரையெல்லாம் ஞாபகத்துல இருக்கா?

அதை அமலாக்க ஏதாவது துரும்பையாவது கிள்ளிப் 
போட்டிருக்கீங்களா?

அப்புறம் என்ன எழவுக்கு இப்ப மட்டும் பேச வந்துட்டீங்க.
வாய மூடிட்டு பேசாம போமய்யா....

No comments:

Post a Comment