Saturday, April 5, 2014

சுனாமி அலையில மோடி நீச்சலடிச்சாராம்?



http://yunus.hacettepe.edu.tr/~osert/HotPot2013/02_kilinc_ozbey/148479-050-AA87518E.jpg

சங் பரிவாரக் கும்பல் வேலூர் மக்களிடம் மத வெறியைத் தூண்ட வெளியிட்டுள்ள பிரசுரம் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதில் உள்ள காமெடி பகுதி பற்றி இப்போது பார்ப்போம்.

குஜராத் பூகம்பம், ரிஷிகேஷ் நிலச் சரிவு, சுனாமி ஆகியவற்றில் மோடி காண்பித்த மீட்புப் பணி பார்த்து அமெரிக்காவே அசந்து போய் இவரிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறதாம்.

பதினைந்தாயிரம் பேரை எண்பது இன்னோவா காரில் காப்பாற்றிய சூப்பர் மேன் வேலையைப் பார்த்து இந்தியாவே கை கொட்டி சிரித்த  பின்னர், அதெல்லாம் இல்லை என்று மோடியே ஒப்புக்கொண்டு மௌனமான பின்பும் கூட அந்த கதையை ஜால்ராக்கள் மட்டும் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சரி குஜராத் பூகம்பத்தின் போது அவர் முதலமைச்சரே கிடையாதே, பிறகு என்ன மீட்புப் பணி செய்தாரு? கேசுபாய் படேலை கவிழ்க்கிற வேலையைத்தான பார்த்துக்கிட்டு இருந்தாரு.

சுனாமிக்கும் குஜராத்திற்கும் சம்பந்தமே இல்லை. தமிழ்நாட்டுக்கும் மோடி வந்து ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடலை. ஒரு வேளை சுனாமி வந்த போது யாருக்கும் தெரியாம வங்காள விரிகுடாவில் நீச்சல் அடிச்சு நிறைய மீனவர்களை காப்பாத்தினாரோ? ஒரு வேளை நம்ம தமிழ்நாட்டு பத்திரிக்கைக்களும் தொலைக்காட்சிகளும் அதை இருட்டடிப்பு செஞ்சுட்டாங்களா? டூ பேட்.

ஆனா ஒபாமாவும் புஷ்ஷும் அசந்து போய்தான் இருக்காங்க. மோடி பேசறதை ஒபாமா பாக்கற மாதிரி, துபாய் பஸ் ஸ்டாண்டை குஜராத்தில இருக்கிற மாதிரி, சீனாவுல உள்ள ரோட்டை குஜராத்தில இருக்கிற மாதிரி எத்தனை போட்டோஷாப் மோசடி போட்டோவை நாமும் பாத்திருக்கோம். பாவம் சில பேரு அதை நிஜம்னு வேற நம்பிக்கிட்டு இருக்காங்க. ஒபாமா மட்டும் நம்ப மாட்டாரா என்ன? நாமே மிகப் பெரிய உடான்ஸ் பார்ட்டிங்க, நம்மையும் மிஞ்சறதுக்கு இந்தியாவில ஒரு பெரிய டூப் மாஸ்டர் இருக்காரேனு பாடம் கத்துக்க கண்டிப்பா வருவாங்க.

அடுத்த அமெரிக்க தேர்தலில் இருக்கு கூத்து.


No comments:

Post a Comment