Saturday, April 26, 2014

மன்மோகன் சோனியாவிற்கு சொன்ன நல்ல செய்தியும் ரொம்பவே நல்ல செய்தியும்




உலகின் ஆயுள்காலத்தை முடிக்கலாம் என்று முடிவு செய்த கடவுள்
அதை அறிவிக்க உலகின் மூன்று முக்கியமான புள்ளிகளை அழைக்கலாம் என்று நினைத்து அமெரிக்காவின் ஒபாமா, ரஷ்யாவின் விளாடிமிர் புடின், இந்தியாவின் மன்மோகன்சிங் ஆகியோரை அழைத்து அந்த தகவலைச் சொல்கிறார். ஏப்ரல் மாதம் முப்பதாம் நாள் உலகம் அழிந்து விடும் என்பதை மக்களுக்கு தெரிவித்து விடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்.

வெள்ளை மாளிகை மூலம் அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சியில் பேசிய பாரக் ஒபாமா, ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது. கடவுள் இருக்கிறார் என்பது நிரூபணமாகி விட்டது. ஆனால் அவர் உலகை அழிக்கப்போகிறார் என்பது கெட்ட செய்தி என அறிவிக்கிறார்.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் முன் தோன்றிய விளாடிமிர் புடின் இரண்டு கெட்ட செய்திகள் இருக்கிறது. கடவுள் இல்லை என்று இத்தனை நாட்களாக நாம் சொன்னது தவறாகி விட்டது என்பது முதல் கெட்ட செய்தி. அந்த கடவுள் இன்னும் நான்கு  நாட்களில் உலகை அழிக்கப் போகிறார் என்பது இரண்டாவது செய்தி என்று அறிவித்தார்.

சோனியா காந்தியிடம் ஓடி வந்த மன்மோகன்சிங் மூச்சிறைக்க சொன்னார். "மேடம் இரண்டு நல்ல செய்திகள் இருக்கிறது. உலகின் மிக முக்கியமான மூன்று புள்ளிகளில் ஒருவராக கடவுள் என்னை தேர்ந்து எடுத்துள்ளார் என்பது நல்ல செய்தி. இன்னொன்று இந்த தேர்தலில் நாம் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போவோம் என்ற கவலை இனி தேவையில்லை. பெட்டிகளை திறக்கும் முன்பே உலகம் அழிந்து விடும்"

(எனக்கு வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம்)  

2 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete