Thursday, April 10, 2014

மனைவியை மறைத்தவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்குங்கள்

யோக்கியவானாக நரேந்திர மோடி தனக்கு திருமணமானதை
ஒப்புக் கொண்டிருக்கிறார். எங்க தலைவரோட நேர்மையப்
பாத்தீங்களா என ஜால்ராக்கள் குதிக்கலாம்.

இப்போது ஒப்புக்கொண்டிருக்கிற அந்த புண்ணியவான் தான்
இதுவரை போட்டியிட்ட சட்டமன்றத் தேர்தல் மனுக்களில்
தனக்கு திருமணமானதை மறைத்துள்ளார்.

இது சட்டப்படியாக தவறு. ஆகவே குஜராத் சட்டமன்றத் 
தேர்தலில் வேட்பு மனுவில் உண்மையை மறைத்த குற்றத்திற்காக
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து அவரது சட்டமன்ற
உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும். 

அதன் அடிப்படையில் இப்போது தாக்கல் செய்த வேட்பு மனுக்களையும்
நிராகரிக்க வேண்டும்.

இந்த பொய்யர் கவுன்சிலராக நிற்கக் கூட அருகதையற்ற மனிதன்.
 

1 comment:

  1. இப்படிப்பார்த்தால் இந்தியாவில் யாருக்கும் தேர்தலில் நிற்க தகுதி இருக்க வாய்ப்பில்லை

    ReplyDelete