Thursday, April 3, 2014

நெருப்பாய் இருக்கும் சிவப்பு





மாடுகள் மட்டுமல்ல
பாவம் சில மனிதர்கள் கூட
சிவப்பைப் பார்த்து
மிரண்டு போகின்றார்கள்.

அபாயத்தின் நிறமல்ல
சிவப்பு,
அபாயம் எங்கே
என எச்சரிப்பது
சிவப்பு.

மக்கள் துயரம் போக்க
களம் இறங்கிய 
தோழர்களை
காவலர்களின், 
சில காலிகளின்
குண்டாந்தடிகள் 
தாக்கிய போது
துப்பாக்கித் தோட்டாக்கள் 
துளைத்த போது
பீறிட்டு கிளம்பிய 
செங்குருதி
தோய்க்கப்பட்டு 
சிவப்பாய் மாறியது
எங்கள் கொடி

மனிதரில் வேற்றுமை 
ஏதுமில்லை என்றே 
சொல்வதும் கூட
உள்ளே ஓடும்
சிவப்பு  ரத்தமன்றோ?

சிலருக்கு உவப்பாக
இல்லாவிட்டால் கூட
சிவப்பு இல்லையேல்
இல்லையே வாழ்வு.

அநீதியை பொசுக்கும் நெருப்பு
அதுதான் எப்போதும் சிவப்பு


No comments:

Post a Comment