Friday, May 16, 2014

எது நடக்கக் கூடாதோ?



எது நடக்கக் கூடாதோ
அதுதான் நடந்துள்ளது.
எது உனக்கும் எனக்கும்
எல்லோருக்கும் தீமையோ
அதுதான் நிகழ்ந்துள்ளது.
ஆட்காட்டி பெருவிரலில்
மை வைத்து
முகத்தில் கரி பூசிக் கொண்ட
புத்திசாலிகளின் தேசம் இது.

ஆரவாரப் பொய்களில்
மதி மயங்கி
ஆல கால விஷம் கக்கும்
பாம்பை ஆதரித்தார்.

தாங்கள் செய்வது
தவறென்றே தெரியாமல்
தவறான மனிதர்களிடம்
தங்களையே ஒப்படைத்த
நல்லவர்களின் தேசம் இது.

ரூபாய்க்கு வெற்றி
ஜாதியையும் மதத்தையும்
முன்னிறுத்திய வெறியில்
பொய் பெற்ற வெற்றி.
பெரிய பெரிய முதலாளிகளின்
சதி பெற்ற வெற்றி.
அணி மாறிய அம்பானிகள்,
அதானிகள் கூட்டம் வென்று
வாக்களித்த மக்கள்
நிஜத்தில் தோற்றுள்ளார்கள்.

மாயையை உருவாக்கிய
கோயபல்ஸ்கள் கூட்டம்
குத்தாட்டம் போடும்,
கொஞ்ச நாள் போனதும்
கத்தியை சொருகும்.

தோல்வியில் துவளாத
செங்கொடிதான் துணை நிற்கும்
உங்கள் உயிர் காக்கும்
தோழனாக.

No comments:

Post a Comment