Saturday, May 24, 2014

கண்ணெதிரே ஓர் விபத்து

ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக நடந்த ஒரு விபத்து.

பல்ஸ்ர் பைக்கில் ஒரு வாலிபன் ஒரு சின்ன தெருவில்
சீறிப் பாய்வது, திடீரென பிரேக் போட்டு நிறுத்துவது,
அரை வட்டம் போட்டு வேகமாக கிளம்புவது என்று
சாகசங்கள் செய்து கொண்டிருந்தான். யாரையோ 
ஈர்ப்பதற்காக என்பது தெரிந்தது.

ஆனால் அரை வட்டம் போட்டு வேகமாக திரும்பும் போது
சறுக்கி அவனும் பைக்குமாக கீழே விழுந்தார்கள்.

காலில் நல்ல அடி. பாண்ட் கிழிந்து ரத்தம் சொட்டியது.
எலும்பும் முறிந்திருக்கலாம். அவனையும் கூட இருந்த
நண்பனையும் ஆட்டோ ஏற்றி அனுப்பினோம் என்றாலும்
கூட  யாரும் அந்த பையனுக்காக அனுதாபப்படவில்லை
என்பதுதான் யதார்த்தம்.

"தேவையில்லாம சீன் காட்டிட்டு இப்ப அடி பட்டுட்டான்.
இந்த பசங்களுக்கு பைக் ஏறினாலே ஹீரோனு நினைப்பு"

இது ஒரு பெரியவரின் வார்த்தை.

நியாயம்தான். 

தேவையற்ற சாகசங்களில் இழப்பதற்கு உயிர் என்ன
மலிவானதா?
 

1 comment:

  1. அவன் கண் எதிரே அவள் தோன்றியதால் ,உங்கள் கண் எதிரே ஏற்பட்ட விபத்து போலும் ?

    ReplyDelete