Thursday, June 26, 2014

போராட்டத்தை மதிக்காத ஜெ, நீதிமன்றத்தையாவது மதிப்பாரா?

நாவலர் நெடுஞ்செழியனின் மருகள் என்ற ஒரே தகுதி மட்டும்
கல்யாணி மதிவாணனை மதுரை காமராஜர் பல்கலைக்கழக
துணை வேந்தராக்கியது.

தகுதியற்ற அவர் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. தனக்கு
எதிராக போராடிய ஆசிரியர்களை அடியாள் வைத்து தாக்கும்
அளவிற்கு மோசமாகப் போனார். எலும்புத்துண்டுகளை சுவைத்த
சில எடுபிடிகள் அவருக்கு ஆதரவாக பொய்யாக புலம்பின.

தகுதியற்ற துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜெ தயாராக
இல்லை. ஆனால் இன்று அவரது பணி நியமனம் செல்லாது
என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் தீர்ப்பு
வழங்கியிருக்கிறது.

தோழர் ஸ்ரீரஸா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட
இந்த பத்திரிக்கைச் செய்தி உங்களுக்கு விபரங்கள் அளிக்கும்.
 




என்ன செய்யப் போகிறார் ஜெ?

யார் பக்கம் நிற்கப் போகிறார்?

அண்ணாமலைப் பல்கழகத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையை
பாராட்டினோம். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?

விடை அறிய அனைவரும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்,
மதுரை மாநகர தொழிற்சங்க இயக்கங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

 

No comments:

Post a Comment