Monday, June 9, 2014

ராஜாவின் ரசிகன் தந்த விருந்து - அனைவருக்கும்தான்

றேடியோஸ்பதி தளம் குறித்து நான் முன்னரே தெரிவித்துள்ளேன்.
இளையராஜாவின் பிறந்த நாளை ஒட்டி  கானா பிரபா எல்லா
இளையராஜா ரசிகர்களுக்கும், இல்லையில்லை அனைத்து
இசை ரசிகர்களுக்குமே ஒரு விருந்து கொடுத்துள்ளார்.

ராஜாவின் பாடல்களில் வரும் கோரஸ் இசையை மட்டும்
தனியாக பிரித்து அவற்றை மாலையாக கோர்த்து நமக்கு
அளித்துள்ளார்.

நூறு பாடல்களிலிருந்து அவர் குழு இசையை மட்டும் பிரித்து
இரண்டு பதிவுகளாக அளித்துள்ளார்.

கேட்பதற்கு அவ்வளவு சுகமாக, இனிமையாக உள்ளது.
நான் ரசித்த அந்த சொர்க்கம்  உங்களுக்கும்தான்.
எல்லா இசை ரசிகர்களுக்கும்தான்.

கேட்கத் தொடங்கினால் ஒரு மணி நேரம் உங்களதில்லை.

கடுமையான பணி செய்த கானா பிரபா வாழ்க.
உங்கள் இசைச்சேவை தொடரட்டும். 

1 comment:

  1. கானா பிரபாவின் இசைச் சேவைத் தொடர வாழ்த்துவோம்

    ReplyDelete