Saturday, August 30, 2014

மோடி அண்ணாச்சி பேசப்போறாரு, எல்லாரும் கேட்கனுமாம்

இன்றைய  ஹிந்து இதழில் வந்துள்ள செய்தி

ஆசிரியர் தினத்தன்று மோடி நிகழ்த்தவுள்ள உரையை  மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டுமாம். பள்ளிகள் அதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாம். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டுமாம்.

சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொன்ன சி.பி.எஸ்.இ  வாரியத்தின் அடுத்த அதிரடி நடவடிக்கை இது. 

எல்.கே.ஜி, யு.கே.ஜி  பசங்க எல்லாம் கூட "ஆப் கி சர்க்கார், அச்சா தின்" உரையை கேட்டேயாக வேண்டுமாம். 

தொலைக்காட்சி வசதி இல்லையென்றால் ரேடியோவிலாவது கேட்க வேண்டுமாம்.

இந்த மனிதன் விகாஸ் புருஷ் இல்லை விளம்பர புருஷ்.

இன்னொரு சந்தேகம் இருக்கு. அது நாளைக்கு

No comments:

Post a Comment