Sunday, October 26, 2014

மழை பெய்ய மரங்கள் வேண்டாம், மந்திரங்கள் ஜபியுங்கள்

சுற்றுச் சூழல் மாசு பட்டுள்ளது, ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டது, மரங்கள் வெட்டப்பட்டு விட்டது  ஆகிய காரணங்களால் மழை பெய்வது பாதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் நாம் இனி அப்பாவித்தனமாக கவலைப் பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். கழுதைகளுக்கெல்லாம் கல்யாணம் செய்து வைக்க வேண்டாம். 

ஆமாங்க, ஆமாம்

இனி தங்களையே கடவுளாகக் கருதிக் கொண்டிருக்கிற சாமியார்களைக் கூட்டி  வந்து மந்திரம் ஜபிக்க சொன்னால் போதும். மழை பெய்யெனப் பெய்யும்.

சந்தேகமாக உள்ளதா?

கீழே உள்ள போஸ்டரைப் படியுங்கள்


பின் குறிப்பு : தமிழகத்திலேயே தைரியமானவர் இவரும் எங்கள் ஊர் சாமியாரும்தான். தங்களை இன்னும் அம்மா என்று சொல்லிக் கொண்டிருப்பதால்

No comments:

Post a Comment