Wednesday, November 19, 2014

கமல் ஸ்ரீதேவி காலமிது



தமிழ்த் திரையுலகில் சில இணைகள் மட்டுமே மிகவும் பொருத்தமாகவும் இயல்பாக இருந்திருக்கிறது. சிவாஜி பத்மினி, ஜெமினி சாவித்ரி  போன்ற அந்த வரிசையில் மிகவும் இய்ல்பாக இருந்தது கமல் ஸ்ரீதேவி இணை. இதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

அந்த இணை நடித்த பத்து பாடல்கள் இன்று.

கறுப்பு வெள்ளைக் காலத்திலேயே தொடங்கியது இந்த இணை. கவியரசரின் அருமையான அந்தாதிப் பாடலை மெல்லிசை மன்னரின் இசையில் பாருங்கள்.

இதுவா,அதுவா எது என்று யோசித்து ஆட்டுக்குட்டியை சுதந்திரமாக மேயவிட்டு ராஜாவின் துள்ளல் இசையில் தாளம் போட வைக்கும்  இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தேன்.


கவியரசரும் மெல்லிசை மன்னரும் இப்படித்தான் இப்பாடலை உருவாக்கியிருப்பார்களோ?  

நான் சொல்லாவிட்டாலும் பாட்டைக்   படத்தின் பெயர் உங்களுக்கே தெரிந்து விடும்.

வானிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்து   பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

பாடலைக் கேட்கையில் என் நினைவும் எங்கோ பறந்து விடுகிறது.

மண்டபத்தில் யாரோ எழுதிய  பாடலோடு வந்தால் இப்படித்தான் மறந்து போய்க் கொண்டே இருக்கும்.

நடிகனிடமே நாடகம்   நடத்துவதா? யார் கிட்ட?

மீண்டும் ஒரு குழப்பம், இதுவா, அதுவா என்று. முன்பொரு பதிவில் கவியரசரின் அந்த கடைசிப் பாடலை பகிர்ந்து கொண்டதால் இப்போது இன்னொரு இனிய புத்துணர்வு அளிக்கும் பாட்டு

இந்தப் படத்திற்குப் பிறகு கமலும் ஸ்ரீதேவியும் ஏன் இணைந்து நடிக்கவில்லை?

 

 

No comments:

Post a Comment