Tuesday, November 18, 2014

மைக டைசன் இல்லையில்லை மைக் கமலஹாசன்

கமலஹாசன் ஒரு பேட்டியில் சொன்னார்.

"நல்ல வேளையாக மோகன் வந்தார். என் கையிலிருந்த மைக்கை அவரிடம் கொடுத்து விட்டு  நான் தப்பித்து விட்டேன்"

 
 http://moviegalleri.net/wp-content/gallery/ninaithale-inikkum-movie-stills/rajini_kamal_ninaithale_inikkum_movie_stills_1ef578b.jpg

ஆரம்ப காலம் தொட்டே அவரது படங்களில் மேடையிலோ இல்லை விடுதியிலோ நடனமாடும் பாடல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். அப்படி அவர் மைக் பிடித்துப் பாடிய அல்லது ஆடிய மேடைப் பாடல்கள் அல்லது விடுதிப்பாடல்களைப் பார்ப்போம். நேற்றைய கறுப்பு வெள்ளை பதிவிலேயே மூன்று மைக் பாடல்கள் இருந்தது என்பது கவனத்திற்குரியது.

 ஆனந்தம் அது என்னது என்று  பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேச பக்தியைச் சொன்ன  நாம் பிறந்த மண்ணா இது?

எங்கேயும் எப்போதும் இப்பாட்டைக்     கேட்டால் தாளம் போடுவது நிச்சயம்.

வெண்ணிலா வேளையில் பார்த்தால்    இப்படித்தான் உற்சாகம் வரும்.

வார்த்தை தவறியவரைப் பார்த்தால்    கோபம் வரும். ஆட்டமும் வருமா?

ஆப்பிரிக்காவிலிருந்து வந்து ஒருவர்   இங்கே ஆடுகிறார்.

ஒரு நட்பின் கதை இப்படியா   சோகத்துடன் ஒலிக்க வேண்டும்?

என்னால் மழையில் நனைய மட்டும்தான்  முடியும். இவரால்தான் ஆட முடியும்.

மோகனிடம் மைக்கை ஒப்படைத்த பின்பும் இவரை மைக் விடவில்லை.

ஆனால் இங்கே கோபத்தோடு தந்தையிடம் பாட்டாலே  சண்டையிடுகிறார்.

இது சமீபத்திய ஆரவாரம்.

நாளை மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment