Monday, December 22, 2014

கமல் 60 - கடைசி பதிவு




கமலஹாசனின் அறுபது சிறந்த பாடல்களை பதிவு செய்யலாம் என்று சென்ற மாதம் தொடங்கினேன். ஆனால் நிறைவுப் பகுதியை எழுதும் முன்னர் வேறு பல வேலைகள் வந்து விட்டதால் முடியவில்லை. இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது.

அதற்கு முன்பாக ஒரு ப்ளாஷ் பேக் போய் வந்து விடலாமா?

முதல் பத்து பாடல்கள் கறுப்பு வெள்ளை காலத்து பாடல்கள்.

அடுத்த பத்து பாடல்கள் மைக் கமல் பாடல்கள் 


நான்காவது பதிவு கமலஹாசனின் காதல் பாடல்கள் 

ஐந்தாவது பதிவும் கூட கமலின் காதல் பாடல்கள்தான் 

சரி நிறைவுப் பகுதிக்குச் செல்வோம்.

இதில் கொஞ்சம் சோகம், தத்துவம் என இருக்கும்.

சொந்த சோகத்தை மறைத்துக் கொண்டு ரசிகர்களுக்கான ஒரு கலைஞன் பாடும் பாட்டு 

எப்போது கேட்டாலும் மனதைக் கவ்வும் ஒரு தந்தையின் சோகம் 

இன்றைக்கு மிகவும் அவசியமான ஒரு பாட்டு. மோடி கேட்கட்டும் 

ஆட்சியாளர்களுக்கு மதம் பிடித்தால்  பக்தனுக்கு கடலில் கல்லறை.

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தை  நினைவு கொள்வோம்.

அனேகமாக பெரும்பாலானவர்கள் இப்படி பாதி பாதியாகத் தான் இருக்கிறோம் 

டாஸ்மாக்கில் வசூலித்து விலையில்லா திட்டங்கள்   கொடுப்பதற்கு இதுதான் அர்த்தமோ?

பாடுபட்டு உழைப்பவர்களின் உண்மையான நிலையை சொல்லும் பாடல் இது.

எத்தனை முறை கேட்டாலும் மனதை பாதிக்க வைக்கும் பாடல் இது  என்பதை நீங்களும் கண்டிப்பாக ஒப்புக் கொள்வீர்கள்.

சென்ற பாடல் போலவே இதுவும் உள்ளத்தை உருக்கும் பாடல்தான்..  ஆனால் இப்பாடலில் கமலை விட ஒரு எள்ளல் சிரிப்பால் நாசர் அசத்தி விடுவார்.

ஆக மொத்தம் அறுபது பாடல்களை என்னுடைய ரசனையின் அடிப்படையில் தேர்வு  செய்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல பாடல்களை போடலாமே என்று எனக்கு ஆலோசனை சொன்னது யார் என்பதை கடைசி பதிவில் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அந்த ஆலோசனையை அளித்தவர்




என் மனைவிதான்.

மனைவி சொல்லை மதிக்க வேண்டுமல்லவா!

கமல் அறுபது பதிவு என்றுமே நினைத்தாலே இனிக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன்.

 


1 comment: