Wednesday, December 10, 2014

ஈ.வி.கே.எஸ் அண்ணே, சில டவுட்டு

 

காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வரும் தலைவர்களை வ்ரவேற்று வேலூர் நகரில் இன்று பல பேனர்கள் இருந்தன. 

அந்த பேனர்களை பார்த்ததும் சில சந்தேகங்கள் வந்தது. அதையெல்லாம் அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள்தான் தீர்க்க வேண்டும்.

கேட்டுரவா சார்.....

உங்கள் கட்சியில் தலைவர்கள் உண்டு. அது சர்வ நிச்சயமாக தெரியும். ஆனால் வேலை செய்ய தொண்டர்கள், அதுதாங்க செயல்வீரர்கள் இருக்காங்களா?

குறைந்தபட்சம் உங்களை வரவேற்று வைக்கப் பட்ட பேனர்களின் எண்ணிக்கை அளவிலாவது இருக்கிறார்களா?

கட்சியைப் பிடித்த ஊழல் கறை நீங்கியது. காங்கிரஸின் கை இப்போது தூய்மையாய் ஜொலிக்கிறது என்ற வாசகங்கள் வேறு இருந்தது.

அப்படியென்றால்  நிலக்கரி பேர மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரமில் தொடர்பு இருக்கிறது என்று ஆ.ராசாவால் குற்றம் சுமத்தப்படும் சிவகங்கை சிதம்பரம், ஆதர்ஷ் ஊழல் புகழ் மகாராஷ்டிர மன்னர்கள் (பட்டியல் போடும் பொறுமை இல்லை), காமன்வெல்த் புகழ் கல்மாடி மற்றும் ஷீலா தீட்சித் அம்மையார், இவர்களையெல்லாம் விட மிக முக்கியமாக ஹரியான நில அபகரிப்பாளரான உங்கள் தலைவி சோனியாஜி யின் மருமகன் வாதேரா ஆகியோரை கட்சியிலிருந்து நீங்கள் நீக்கி விட்டீர்களா என்ன? வேறு எந்த ஊழல் பேர்வழிகளை நீக்கி இப்போது "கை" தூய்மையாக பிரகாசிக்கிறது?

சரி, ஒரு வேளை நீங்கள் சொல்வது வாசன் அணியினரை என்றாலும் கூட, அவர்களாகத்தானே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்கள்? ஊழல் குற்றச்சாட்டுக்காக நீங்கள் ஒன்றும் நீக்கவில்லையே?

சரி, சரி, கோபமாகாதீங்க, இதுக்கெல்லாம்  உங்களால பதில் சொல்ல முடியாதுனு எனக்கும் தெரியும். அதனால இந்த பில்ட் அப் வேலைகளையாவது நிறுத்திக்குங்க.

1 comment: