Tuesday, December 2, 2014

சஹாரா, சாரதா பாஜக திரிணாமுல் மோதல் – பங்கு பிரிப்பதில் பிரச்சினையா?




சாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தா பானர்ஜி குற்றவாளி என்று பாஜக கட்சியினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

ஊரை அடித்து உலையில் போட்ட சஹாரா நிறுவனத்தின் முதலாளி சுப்ரதோ ராயின் டைரி படி அவரிடமிருந்து பாஜக தலைவர் அமித் ஷா லஞ்சம் வாங்கியுள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் ஆட்கள் புகார் சொல்கின்றனர்.

கொள்ளையடித்த பின்பு பங்கு பிரிப்பதில் பிரச்சினை வந்தால் திருடர்கள் ஒருவர் மற்றொருவர் மீது இப்படித்தான் மாறி மாறி குற்றம் சொல்லி அடித்துக் கொள்வார்கள்.

இவர்கள் இப்படி மோதுவதும் அது போலத்தானோ?

No comments:

Post a Comment