Tuesday, April 14, 2015

சர்ச்சை சாமியாருக்கு அரசு மரியாதையாம்! கண்றாவி!!

 
சர்ச்சை சாமியார் ராம்தேவிற்கு கேபினெட் அந்தஸ்து தருவதாக ஹரியானா மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

யோகாவையும் ஆயுர்வேதத்தையும் வளர்த்தெடுப்பதற்கான விளம்பரத் தூதுவராக சாமியார் ராம்தேவை நியமித்து அவருக்கு அமைச்சருக்கான சகல வசதிகளும் மரியாதையும் அளிப்பது என முடிவு செய்துள்ளது.

ராம்தேவ் ஏற்கனவே யோகா வணிகத்தில் கொடிகட்டி பறப்பவர். மேலும் விலங்குக் கழிவுகளைக் கலந்து ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் கலப்பட மருந்து விற்பனை செய்து கொண்டிருப்பவர்.

இப்போது ஹரியானா மாநில அரசு எடுத்துள்ள முடிவின் உண்மையான அர்த்தம் என்னவென்றால்

ராம்தேவ் சாமியார் இப்போது தனிப்பட்ட முறையில் செய்து கொண்டிருக்கிற  யோகா வணிகத்தையும் கலப்பட மருந்து வியாபாரத்தையும் அரசின் செலவில் அரசு மரியாதையோடு செய்ய அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

பாஜக ஆட்சியில் இன்னும் என்னென்ன கண்றாவியெல்லாம் நடக்கப் போகிறது?

2 comments:

  1. This saamiyaar was behind the attack and arrest of other saamiyaar ( he is saamiyaar for backward and scheduled community) in hariyana last year. Saamiyaars also fight on the basis of caste. Nobody think in this line!

    ReplyDelete
  2. நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete