Thursday, May 28, 2015

மோடிக்கு பாஜக தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தப் பரிசு





நேற்று முன்தினம் புதுடெல்லியில் அனைத்து தொழிற்சங்கங்களின் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்த கருத்தரங்கம் தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து பின்பு ஒரு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஒரு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு அரசு என்ற குற்றச்சாட்டோடு அந்த பிரகடனம் துவங்குகிறது. (அதன் தமிழாக்கத்தை நாளை பகிர்ந்து கொள்கிறேன்).

மத்தியரசு அதன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை மாற்றிக் கொண்டு பெரு முதலாளிகளுக்கு வால் பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது.

பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்வது என்பதும் 02.09.2015 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று அக்கருத்தரங்கம் முடிவெடுத்தது.

இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டும் பங்கேற்ற கருத்தரங்கம் அல்ல இது. காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி மற்றும் திமுக வின் தொமுச வோடு பாரதீய ஜனதா கட்சியின் தொழிற்சங்கமான பாரத் மஸ்தூர் சங்கின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஆம். நிஜமாகத்தான்.

பி.எம்.எஸ் சங்கத்தின் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பிரகடனத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக பேசாதே என்று ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தி சில நாட்கள் கூட முடியாத சூழலில் பி.எம்.எஸ் சங்கம், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக மற்ற தொழிற்சங்கங்களோடு கரம் கோர்த்து நிற்பது முக்கியமானது.   

மோடியின் நடவடிக்கைகளைச் அவர்களைச் சேர்ந்தவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஆகவே பாஜக ஆட்கள் யாரும் ஓராண்டு சாதனை என்று கதை விட வேண்டாம்.

2 comments:

  1. வியப்புதான் மிஞ்சுகிறது நண்பரே

    ReplyDelete
  2. BANK EMPLOYEES WHO WORK LIKE SLAVES FOR IMPLEMENTING VARIOUS YOJANAS OF MR MODI
    WERE GIVEN PALTRY SALARY INCREASE AFTER 93 MONTHS PROTRACTED NEGOTIATIONS.WHERE AS
    CENTRAL AND STATE GOVT EMPLOYEES ENJOY BETTER PAY PACKAGES AND PERIODICAL UPGRADATION
    OF PENSION. IS THIS JUSTICE FOR WORKING CLASS OF INDIA.

    ReplyDelete