Thursday, July 16, 2015

எம்.எஸ்.வி மற்றும் சில கதாநாயகிகள்



 
நேற்றைய பதிவு மெல்லிசை மன்னரின் இசையில் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாடல்கள். இன்றைய பதிவில் கதாநாயகிகளை மையப்படுத்தி எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்களைப் பார்ப்போம்.

இரட்டையர் பிரிந்த பின்னர் எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த முதல் படம் கலங்கரை விளக்கம். அதிலே பாவேந்தரின் இப்பாடலுக்கு சரோஜாதேவி ஆடும் நடனம் அற்புதம்.

பாடலை பாடுபவர் என்னமோ நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். ஆனால் நம்மை ஈர்த்தது என்னமோ நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நடனம்.

கே.ஆர்.விஜயாவால் இப்படிக் கூட நடனமாட முடியுமா என்று இப்பாடலை இன்று பார்ப்பவர்கள் அதிசயித்துப் போவார்கள். நின்றபடியே கவனத்தை நடிகர் திலகமும் அள்ளிச் செல்வார்.

காதலின் வருகைக்காக காத்திருக்கும் ஏக்கத்தை குரல் வழியாய் பி.சுசீலா வெளிப்படுத்த வாணிஸ்ரீ அதை தனது நடிப்பில் பிரதிபலிப்பார்.

சுதந்திர வேட்கையுள்ள  ஒரு பெண்ணின் உணர்வும் உற்சாகமும் ஜெயலலிதாவின் நடிப்பில்  வெளிப்படும்.

காஞ்சனாவிற்கு அழியா புகழை தேடிக் கொடுத்த பாடல் இது.

காற்றுக்கு இல்லாத வேலி எனக்கு மட்டும் ஏன் என்று கேட்கிறார் சுஜாதா.

ஸ்ரீவித்யா மறைந்தாலும் எம்.எஸ்.வி இசையமைத்த இந்த இப்பாடல் என்றும்  நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.

இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் இப்பாடலில் ஜொலிப்பது என்னவோ ஜெயப்பிரதா தான்.

வறண்டு போன நிலத்தில் சரிதா பாடும் கண்ணீர் ததும்பும் தாலாட்டு

நாளை வேறு வித்தியாசமான தொகுப்போடு சந்திக்கிறேன்.

பின் குறிப்பு : எல்.ஐ.சி நிறுவனத்தில் எனது முப்பதாவது ஆண்டு பணி இன்று தொடங்கியது. 

1 comment: