Sunday, July 19, 2015

எம்.எஸ்.வி க்கான இசையஞ்சலியில் இன்று

 

எம்.எஸ்.வி க்கான இசையஞ்சலியில் அவரது இசையில் சில பாடகர்கள் பிரகாசித்த பாடல்களைப் பார்ப்போம். 

முதல் நான்கு பாடல்கள் மட்டும் அவர் இரட்டையராக இசையமைத்த படங்களின் பாடல்கள்.

இன்றைய இளைய தலைமுறை திரு சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் கணீர் குரலை அறிந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்காகவே இங்கே வெண்ணிலா  விண்ணோடும் முகிலோடும் விளையாடுகிறது.

திரு டி.ஆர்.மகாலிங்கம் செந்தமிழ்மொழியாள் பற்றி வர்ணித்துள்ளதை 
பாருங்களேன்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் காலத்தால் அழியாத பாடலை நல்ல உள்ளம் கொண்டவர்கள் பாருங்கள்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாடல்களில் இதுவும் இனிமைதான்.

டி.எம்.எஸ் இங்கே எந்த நிலவைத்  தேடுகிறார்?

பால முரளி கிருஷ்ணாவோ மனசாட்சியுடன் மௌனமாக விளையாடுகிறார் 

காஞ்சிப் பட்டுடித்து கஸ்தூரி பொட்டு வைத்தால் எப்படி இருக்கும் என்பதை கே.ஜே.யேசுதாஸ் குரலில் கொஞ்சம் கேளுங்கள் 


 எம்.எஸ்.வி இசையில் இசையமைப்பாளர் சந்திரபோஸ் பாடிய பாடலைக் கேளுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment