Thursday, July 2, 2015

விஜய் மேல என்னப்பா கோபம்?



ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு தோழரின் தந்தை இறந்து போனார். அந்த துக்க வீட்டிற்குப் போன போது  ஒரு வித்தியாசமான காட்சி கண்ணில் தென்பட்டது.

அங்கே தப்பாட்டம் இசைக்க வந்திருந்தவர்களில் ஒருவரின் கையில் இருந்த தப்பில் (அது ஃபைபரால் செய்யப்பட்டது) விஜயின் படம் வரையப் பட்டிருந்தது. சரி விஜய் ரசிகர் போல, தன்னுடைய வாத்தியத்தில் அவரது படத்தை வரைந்து வைத்திருக்கார் என்று எண்ணிக் கொண்டேன்.

நேற்று இன்னொரு தோழரின் தாயின் மறைவுக்காக சென்ற போது அதே போல இன்னொருவரும் விஜயின் படத்தை தன்னுடைய தப்பில் வரைந்து வைத்திருந்தார். இருவரும் வேறு வேறு. ஒரு வேளை ஒரே தப்பாகக்கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

வேகமாக தப்பிசைக்கும் போது ஒவ்வொரு அடியும் விஜயின் படத்தின் மேல்தான் விழுந்து கொண்டிருந்தது. எந்த ஒரு ரசிகராகவது தன்னுடைய அபிமான நட்சத்திரத்தின் மீது அப்படி வேகமாக அடிப்பார்களா என்று ஒரு சந்தேகம் கூட வந்தது.

ஒரு வேளை "சுறா", "வேட்டைக்காரன்" போன்ற படங்களைப் பார்த்து நொந்து போன ரசிகர்களாக இருப்பார்களோ?



பின் குறிப்பு : மேலேயுள்ள படம் நான் செய்த காபி, பேஸ்ட் வேலை

No comments:

Post a Comment