Tuesday, September 29, 2015

பாஜக சட்டியில் கிரிமினல்கள் இருந்தால் அகப்பையில் எப்படி?


பீஹார் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக கட்சி கிரிமினல்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யப் படுவதற்கோ எதுவுமே இல்லை.

சட்டியில் என்ன இருக்கிறதோ அதுதானே அகப்பையில் வரும்!

பாஜக எனும் சட்டியில் கிரிமினல்கள் நிரம்பி வழிந்தால் எம்.எல்.ஏ சீட் கொடுக்க அகப்பையில் அள்ளினால் உத்தமர்களா வருவார்கள்?

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 

கிரிமினல்களுக்கு பாஜக முன்னுரிமை கொடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகளோ இல்லை ஊடகங்களோ இல்லை வேட்பு மனு விபரங்களைப் பார்த்து வேறு அமைப்புக்களோ சொல்வதற்கு முன்பாக பாஜக கட்சிக்காரரே முதலில் சொல்லி விட்டார். அவ்வளவுதான்.

பாம்பின் காலை பாம்பே நன்கறியும்.

பாஜக பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் நடத்தும் பணக்காரர்களின் கட்சி மட்டுமல்ல, கிரிமினல்களுக்காக கிரிமினல்கள் நடத்தும் கிரிமினல்களின் கட்சியும்தான் என்பதை  ஊருக்கு உரக்கச் சொன்ன அந்த எம்.பி யின் கதி என்னவாகப் போகிறதோ?

 

 

No comments:

Post a Comment