Friday, October 23, 2015

நாய்களின் அரசியல்





தங்களைப் போலவே
பிறரையும் எண்ணுகின்ற
வெறிநாய்களின் கண்களுக்கு
தென்படுவதெல்லாம்
நாய்களாகவே தெரிகிறது.

ஆயிரமாயிரம் பேர்
இறந்தாலும் அவரெல்லாம்
வெறும் காரில் அடிபட்ட
நாயின் மகனென்றே
அலட்சியமாய்ச் சொல்லிச்
சென்றது அன்று.

கருகி இறந்த
பச்சிளம்குருத்துக்களை
கல்லால் அடிபட்ட நாய்களென
ஆணவம் காட்டுவது இன்று.

இனியுமா உங்களுக்கு நம்பிக்கை,
நாய்களின் ஆட்சியில்
மனிதர்களுக்கெல்லாம்
“அச்சா தின்” வருமென்று?

கல்லால் அடித்து துரத்தாமல்
இன்னும் கருணை காட்டினால்
வெறிநாய்கள் கடித்துக் குதறும்
உங்களையும் என்னையும்
கண்ணில் படும் யாவரையும்.

வெறி பிடித்த சொறி நாய்கள்
இன்னும் திரிந்தால்
இந்தியா இனி “ரேபிஸ் தேசம்”


No comments:

Post a Comment