Saturday, January 30, 2016

யார் முதல் பலி?



மகாத்மா -
சகிப்பின்மை
சாய்த்த
முதல் பலி.

செய்வது என்னவென்று
அறியாமல் சிலர்
சிவப்புக் கம்பளம்
விரித்ததாலே
ரத்த ருசி
கண்ட கூட்டம்
தினம் தினம்
கேட்கிறது
ஒற்றுமையையும்
நல்லிணத்தையும்
தனக்கான பலியாய்.

அண்ணலின் ரத்தம்
இன்னும் ஒளிர்கிறது
நம் நிஜமான
பகைவர் யாரென
இனம் காண
அபாய விளக்காய்



2 comments:

  1. அருமையான எச்சரிக்கைப்பதிவு.

    ReplyDelete
  2. இந்தியாவை சுடுகாடாக மாற்றி விடுவார்கள்

    ReplyDelete