Monday, May 2, 2016

சென்னை பெங்களூர் சாலையில் பணக் கடத்தல். . .



தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய பின்பு மட்டுமே மூன்று முறை சென்னை சென்று திரும்பினேன். மூன்று முறையுமே காரில்தான் பயணம். 

இந்த மூன்று பயணங்களிலும் எங்குமே பறக்கும் படையோ அல்லது நிற்கும் படையோ எங்குமே சோதனை செய்யவில்லை. அப்படி ஒன்று இருப்பதற்கான அறிகுறி கூட எங்கும் தென் படவில்லை. 

அப்படியென்றால் அதற்கென்ன அர்த்தம்?

பிரதானமான இந்த சாலையில் வேகமாக வாகனங்கள் விரைவதால் பணக் கடத்தல் நடப்பதற்கு சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்து விட்டதா?

அல்லது 

பணப்பறிமாற்றம் அதிகமாக நடக்க வாய்ப்புள்ள ஒரு சாலையில் பறக்கும் படையை நிற்கவைத்து பிரதானக் கழகங்களுக்கு எதற்கு தேவையற்ற ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டும் என்று தவிர்க்கிறதா?

மொத்தத்தில் இந்த பற்க்கும் படை என்பதே ஒரு வெட்டி வேலையாகவே இருக்கிறது.

 

No comments:

Post a Comment