Tuesday, June 28, 2016

இளிச்சவாய் இந்தியர்கள் ஒரு கோடி பேரா?





சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள் ஒரு கோடியை தாண்டி விட்டதாகவும் அதனால் 1800 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்று சில நூறு கோடி ரூபாய் செலவு செய்து மோடி தன் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து கொண்டு வருகின்றார். (மிச்சமான ஆயிரத்து எண்ணூறு கோடியைக் கொண்டுதான் மோடி தனக்கென இரண்டாயிரம் கோடி ரூபாய் சிறப்பு விமானம் வாங்குகிறாரோ?)

சில மாதங்கள் முன்பாக அதானி, அம்பானி போன்ற ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுகிற ஐயாயிரம் இந்தியர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்ததாகவும் மாதச்சம்பளம் வாங்கி கொழுத்த பணக்காரனாக மாறிய நீயும் ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மோடியின் சார்பாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அநேகமாக ஐயாயிரம் பேர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி வந்து ஏழெட்டு மாதங்கள் இருக்கும்.

சரி, ஒரு வருடம் என்றே எடுத்துக் கொண்டாலும், இந்த ஒரு வருட காலத்திற்குள் மோடியின் வேண்டுகோளை நம்பி ஒரு கோடி பேர் தங்களின் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்து விட்டார்களா? என்னத்தான் மோடிக்கு வாக்களித்து ஏமாந்தவர்கள்தான் இந்திய மக்கள் என்றாலும் இப்படி அவசியமே இல்லாமல் மானியத்தையெல்லாம் இழக்கக் கூடிய அளவிற்கு ஏமாந்தவர்களாகவா இந்திய மக்கள் இருக்கிறார்கள்?

பொதுவாக எங்கள் கோட்ட அலுவலகத்தில் ஒரு நடைமுறை உண்டு. கிளைகளிலிருந்து ஏதேனும் ஸ்டேட்மெண்ட் வர வேண்டுமென்றால் அதில் தாமதமானால், உங்கள் கிளையிலிருந்து மட்டும்தான் வரவில்லை, மீதமுள்ள இருபத்தி ஓரு கிளைகளும் அனுப்பி விட்டனர் என்று சொல்வதுண்டு. இதே வசனம்தான் எல்லா கிளைகளுக்கும் சொல்லப்படும். அநேகமாக எல்லா துறைகளிலும் எல்லா இடங்களிலும் பின்பற்றக் கூடிய உத்தி இது.

இப்படிப்பட்ட ஒரு உத்தியைத்தான் மோடி பயன்படுத்துகிறார் போல! பொய் சொல்வது அவருக்கு புதிதா என்ன? ஆயிரக்கணக்கான குஜராத்திகளை உத்தர்கண்டிலிருந்து இன்னோவா கார் மூலம் காப்பாற்றிய ஜேம்ஸ்பாண்ட் சூப்பர்மேன் ராம்போ அல்லவா அவர்!!!

இதிலே அவரது பேட்டியைப் பார்த்து பல அதிமேதாவிகள் புளகாங்கிதம் வேறு அடைந்துள்ளார்கள்!!!!! அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் வரை மோடியின் காட்டில் மழைதான். 

அடுத்து ரயில் சீனியர் சிட்டிஸன் சலுகைக்கும் குறி வைக்கப் பட்டுள்ளது. இன்றைய, நாளைய முதியோர்களே, எச்சரிக்கை


6 comments:

  1. எல்லாத்தையும் சுருட்டிட்டு மல்லையா மாதிரி போகப்போராரோ என்னவோ ?

    ReplyDelete
  2. If you can't give up your subsidiary even though you can pay the market price you are not a Marxist. your also an exploitative of the system as any Marxist would do. I have given up not because of present govt. but I firmly believe that those who can afford to pay should pay the market price for any service you get. If you can't afford don't have it. it is as simple as that.

    ReplyDelete
    Replies
    1. I am coming with a detailed post. Congratulations. With your comments, You got exposed. //those who can afford to pay should pay the market price for any service you get. If you can't afford don't have it.// in a haste, you showed your true colours

      Delete
  3. what is the wrong in giving up subsidy ? can you please explain?

    ReplyDelete
  4. Answer Raman's questions...
    Why can't rich guys and big fortune companies give up tax-concessions and other corporate welfare dole?

    ReplyDelete