Saturday, June 4, 2016

அன்று எங்கள் அலுவலகத்திற்கு வந்தவர், இன்று . . .



கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டை ஒட்டி கேரளாவிலிருந்து ஒரு பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. வேலூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மறுநாள் காலை அந்த பிரச்சாரக்குழுவிற்கு எங்கள் அலுவலகத்தில் ஒரு வரவேற்பளித்தோம். பயணக்குழுவின் தலைவராக இருந்த தோழர் தங்கள் பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் குறித்து எங்கள் மத்தியில் உரையாற்றினார். சிறிது நேரமே பேசினாலும் அவரது ஆணித்தரமான உரை அனைவராலும் பாராட்டப்பட்டது.

அந்த பிரச்சாரப் பயணக்குழுத் தலைவர்தான் கேரள மாநிலத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள தோழர் ஸ்ரீராமகிருஷ்ணன்.

இன்று செய்திகளை பார்க்கையில் அன்றைய நிகழ்வு நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வின் புகைப்படங்களையும் தேடிப் பிடித்து எடுத்து விட்டேன். அவை கீழே. 




2 comments:

  1. நினைவுகூர்ந்து பகிர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete