Tuesday, June 21, 2016

சுடுகாட்டில் ... உனக்கொன்னு .... எனக்கொன்னு...



சிரிக்க வைக்கும் ஒரு சுடுகாட்டுக் கதை.

வாட்ஸப்பில் வந்தது. நீங்களும் படித்துச் சிரியுங்கள்



இரண்டு சின்ன பையங்க,
ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை
எடுத்துட்டு ஓடி வந்தாங்க.

-ஒரு அமைதியான இடத்துக்கு போய்  இரண்டு பேரும் அத பங்கு போட்டு கிட நினைச்சாங்க.

-பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு  ஒருத்தன் சொன்னான்.

-சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சி.  -கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.

-அப்படி குதிக்கும் போது **இரண்டு ஆரஞ்சுப் பழம் கீழ விழுந்துட்டுது.

-கூடைல நிறைய பழம் இருந்ததுனால,  அத அவுங்க கண்டுக்கல.

->கொஞ்ச நேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.

->அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.

'''"உனக்கொன்னு,
 ''''''எனக்கொன்னு,
 '''''''உனக்கொன்னு,
''''''எனக்கொன்னு,

"'''இத கேட்ட அவனுக்கு குடி போத போயிட்டுது.

=>அடிச்சிப் பிரண்டு பக்கத்துல உள்ள ஆலயத்துக்குப் போயிட்டு அங்க இருந்த *பாஸ்டர் கிட்ட சொன்னான்.

**பாஸ்டர் தயவு செய்து என் கூட வாங்க.  கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்.

->பாஸ்டர்க்கு ஒன்னும் புரியல.  *ஆனாலும் அவன் ரொம்ப வருந்தி கூப்டதுனால  அவன் கூட போனாரு.

->சுடுகாட்டுல இருந்து சத்தம் வந்துச்சிது.

"'''உனக்கொன்னு,
 '''''எனக்கொன்னு,
'''''உனக்கொன்னு,
 '''''எனக்கொன்னு",

->>திடீர்ன்னு சத்தம் நின்னுச்சிது.

=>>ஒரு சத்தம் தெளிவா கேட்டுச்சிது.

->>ஆமா....  கேட்ல இருக்குற
*இரண்டு யாருக்கு?...

^^நாங்க இன்னும் சாகல,  நாங்க இன்னும் சாகலன்னு சொல்லிக்கிட்டே,

*பாஸ்டரும், *குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடுனாங்க


No comments:

Post a Comment