Monday, June 27, 2016

காமெடி பண்ணாதீங்க மோடி!!!!!!!



செப்டம்பர் மாதம் முப்பதாம் தேதிக்குள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் அரசாங்கம் கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால் தப்பித்தார்கள், இல்லையென்றால் எனது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

இதுதான் நரேந்திர மோடியின் எச்சரிக்கை.

இதைப் படித்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

ஊரில் இருக்கிற திருடன், கொள்ளைக்காரன், மோசடிப் பேர்வழி, ஏமாற்றுக்காரர்கள், வங்கிக் கடனை திருப்பிக் கட்டாதவன், அரசாங்கப் பணத்தை  சுரண்டறவன், இந்தியாவின் இயற்கையெல்லாம் வெட்டி எடுத்து பிழைப்பு நடத்தறவன்னு இந்தியா உள்ள எல்லா பிராடும் அத்தனை பேரும் இவரோட கூட்டாளி, அவங்க தயவுலதான் இவரு பிரதமரா இருக்காரு, அவங்களுக்காகத்தான் இவரு பிரதமராவே இருக்காரு.

அவங்க மேல இவரு கடுமையா நடவடிக்கை எடுக்கப் போறாராம்.

“இதை இட்லினு சொன்னா சட்னியே ஒத்துக்காது” கதையா காமெடி பண்றாரு மோடி.

இதெல்லாம் உங்களுக்கு சரியா வராது மோடி. நீங்க பேசாம மறுபடியும் ப்ளைட் பிடிச்சு அமெரிக்காவுக்கே போயிடுங்க.

2 comments: