Monday, August 15, 2016

காட்டுக்கு நடுவே இருந்தாலும்

இரண்டு வாரங்களுக்கு முன்பாக பாலக்காட்டில் தென் மண்டல அளவிலான ஒரு தொழிற்சங்க வகுப்பு. 

வகுப்பு நடந்த இடம் - பாலக்காட்டிலிருந்து ஒரு பத்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்த முண்டூர் என்ற இடத்தில் இருந்த ஒரு ஊரக பயிற்சி மையத்தில். 

கிட்டத்தட்ட காட்டிற்கு நடுவில் இயற்கைச் சூழலில் இருந்தது அந்த இடம். முதல் நாள் சூரியன் மறைந்த பின்னும் வகுப்பு தொடர்ந்தது. மறு நாள் மதிய உணவோடு வகுப்பு முடிந்தாலும் ரயிலைப் பிடிக்க வேகமாக ரயில் நிலையம் வந்து விட்டோம். 

ஓடும் ரயிலிலிருந்துதான் கேரளாவின் இயற்கை அழகை புகைப்படம் எடுக்க முடிந்தது. ரயிலின் வேகத்தில் பல தேறவில்லை என்பது ஒரு வருத்தம். அதையும் தாண்டி இறுதியில் கிடைத்தவை இவை மட்டுமே.

ம்ம்ம். நல்லதொரு வாய்ப்பை விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதால் இழந்து விட்டேன்.




2 comments:

  1. தங்களின் ரசனைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இந்த இடங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.

    ReplyDelete