Tuesday, August 16, 2016

அவசியமற்ற அந்த மூன்று சிலைகள்

மருத்துவர் ஐயாவின் தைலாபுரத் தோட்டத்தை கடந்து செல்கையில் ஒரு விஷயம் எரிச்சலூட்டும்.  அங்கே நடந்த கசப்பான சம்பவத்தைச் சொல்லவில்லை. இது வேறு.

தோட்டத்து வாசலில் அவர்கள் வைத்திருக்கிற அந்த மூன்று சிலைகள்.



காரல் மார்க்ஸ்,
அண்ணல் அம்பேத்கர்,
தந்தை பெரியார்

ஆகியோரது சிலைகளை அங்கே வைத்திருக்கிறார்கள்.

உழைப்பாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தச் சொன்னவர் காரல் மார்க்ஸ். அவர்களை ஜாதிய ரீதியாக பிளவு படுத்துவதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதான செயல்திட்டம்.

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து தாக்குவதுதான் பாமக வின் முக்கிய அரசியல் நடவடிக்கை.

பகுத்தறிவுக் கொள்கைகளையும் பெண் விடுதலையையும் அழுத்தமாக வலியுறுத்தியவர் தந்தை பெரியார். ஜாதியை முன்வைத்து பெண்களின் சுதந்திரத்திற்கு தடைகள் போடுவது ஐயாக்களின் அரசியல் கொள்கை.

பின் எதற்கு இவர்கள் தோட்டத்து வாசலில் மார்க்ஸூம், அம்பேத்கரும் பெரியாரும் திருஷ்டி பொம்மைகள் போல காட்சியளிக்க வேண்டும்?

இவர்களை எந்நாளும் பின்பற்றக் கூடாது  என்பதற்காக மூவரையும் வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்து விட்டாரோ மருத்துவர் ஐயா?

பின் குறிப்பு : கடந்த வாரம் ஒரு நாள் கடலூரிலிருந்து புதுவை வழியாக திரும்பிக் கொண்டிருந்த போது மாலை இரவாக மாறிக் கொண்டிருந்த போது சாலையிலிருந்து எடுத்த படம். அதனால்  தெளிவாக இல்லை. 

5 comments:

  1. 3 priciple enemies to them....so they should not forget.


    ReplyDelete
  2. //இவர்களை எந்நாளும் பின்பற்றக் கூடாது என்பதற்காக மூவரையும் வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்து விட்டாரோ மருத்துவர் ஐயா?//
    ஆம் பார்த்து தாங்கள் எச்சரிக்கை அடைவதற்காக நிறுத்தி வைத்திருப்பார்கள்.
    பொது இடங்கள் தெருக்களில் சிலைகளை கொண்டுவந்து வைக்காமல் தங்கள் தேட்டத்தில் வைத்ததை பாராட்டலாம்.

    ReplyDelete
  3. some of his views cannot be brushed aside ji he kept a thorough distance from dmk a good deceision.....otherwise evil dmk would have come to power in 2016

    ReplyDelete
  4. அந்த மூன்று சிலைகளில் காரல் மார்க்ஸ் சிலையை தவிர மற்ற இரண்டையும் குப்பை தொட்டியில் போடணும்

    ReplyDelete
    Replies
    1. இப்படி அப்பட்டமான ஜாதிய வெறியை வெளிப்படுத்தியுள்ள உங்களுக்கான சரியான இடம் கூட குப்பைத் தொட்டிதான்.

      Delete