Wednesday, September 21, 2016

இது மட்டும் நடக்கவில்லையென்றால் ??????????

 நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்கலை என்று கவுண்டமணி சொன்னது போல நானும் சொல்ல வேண்டியுள்ளது. நேற்றிலிருந்து வாட்ஸப்பில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் செய்தி இது.

இதெல்லாம் நடக்காமல் போகட்டும். (நடக்காது என்பதுதான் உண்மை) அப்போ வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை.

மக்களை பயமுறுத்தியே வைக்கறதில என்னத்தான் அற்ப ஆசையோ?

 
 
நம்பினால் நம்புங்கள் …!!!! துர்முகி ஆண்டு 2016 (oct 2016 – Jan 2017)
@கோவை, ஈரோடு, சேலம் , பொள்ளாச்சி ,உடுமலை , வால்பாறை போன்ற ஊர்களில் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது !!!
சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் !!!
புரட்டாசி மாதம் : தமிழ்நாடு முழவதும் மழை , ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்…கோடி போகும் ..!!!இரவில் அடிக்கடி இடி மின்னல் தோன்றும் !
கார்த்திகை மாதம் அதிக மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடங்கள் சேதம் !!!அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் !!!
7.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1200 கி.மீ இலங்கை , அந்தமான் ,இராமேசுவரம் பாதிப்பு !!
15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ…பூமிஅதிர்ச்சி…!!
15.10.2016-15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ 20. 10.2016-வங்க கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1215 கி.மீ..!!
3.11.2016 முதல் மழை சென்னையை உலுக்கும் …!!!
6.11.2016 -காற்றழத்த தாழ்வு மண்டலம் 1400 கி.மீ-புயல் வீசும்..!
13.11.2016 –முக்கிய அணைகள் நிரம்பி வழியும் ..!
17.11.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1053 கி.மீ இலங்கை , தென்மாவட்டங்கள்  பாதிப்பு !!அதிக சேதாரம் !!!
அனைத்து இடங்களிலும் வெள்ளம் !!!
22.11.2016 ஜப்பான்,இந்தோநேசியா பூகம்பம் !!
4.12.2016 முதல் மதுரை பாதிப்பு ..!உலகத்தில் பிரளயம் ..!
10.12.2016 மழை சென்னையை 1 வாரம் உலுக்கும் !!! தாம்பரம் பாதிப்பு 
          அந்தமான் பூகம்பம் …!!!
11.12.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1130 கி.மீ ஒரிசா,மகாராஷ்டிரா    
         பாதிப்பு!!!
11.12.2016 மழை சென்னை பாதிப்பு !!!காசி , நீலகிரி மாவட்டம் மழையால் பாதிப்பு !!!
7.1.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1800 கி.மீ –லேசான நில நடுக்கம் …!!!
----ஆற்காடு வே.சீதாரம்மய்யர் பஞ்சாங்க கணிப்பு…!!! 
 
பின் குறிப்பு : படம் போடுவதற்காக தேடிய போது போன வருடத்து பஞ்சாங்கம்தான் கிடைத்து

3 comments:

  1. இவையெல்லாம் கோவிலில் கூட்டத்தைச் சேர்க்க ,சொல்லப் படுகின்ற புரூடாக்கள்:)

    ReplyDelete