Monday, October 3, 2016

ப்ளாக் செய்யாமல் கொஞ்சவா முடியும்????




தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணா மோடியைக் கண்டித்து முக நூலில் ஒரு பதிவு போட்டிருந்தார். பால முரளி என்ற ஒரு அநாகரீகக் காவி ஆபாசமாய் பின்னூட்டமிருந்தார். அந்த ஆபாசப் பின்னூட்டத்தை கண்டித்து நானும் அவருக்கு ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன்.

நேற்று அந்த அநாகரீகப் பேர்வழியிடமிருந்து முகநூல் நட்பு அழைப்பு வந்திருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த மனிதனிடமிருந்து ஒரு செய்தியும் வந்திருந்தது.

அந்த நபரை தோழர் கருப்பு கருணா ப்ளாக் செய்து விட்டாராம். அதனால் அவரை மீண்டும் அசிங்கமாக திட்டி விட்டு, அவரது ஆபாச பின்னூட்டத்தை கண்டித்த எனக்கு பதில் கொடுப்பதற்காக அவரது நட்பு அழைப்பை ஏற்க வேண்டும். "அப்படி ஏற்கவில்லையென்றால் " என்று சொல்லி என்னையும் அசிங்கமாக மிரட்டி இருந்தார்.

ஆரோக்கியமான விவாதம் எதையும் காவிகளால் எந்நாளும் நடத்தவே முடியாது. மோடி செய்வதெல்லாம் அயோக்கியத்தனம் என்பது அவர்களுக்குத்தான் மற்ற எல்லோரையும் விட மிக நன்றாகவே தெரியும். அதனால்தான் ஆபாசமான, அசிங்கமான பின்னூட்டங்கள் மூலம் அர்ச்சனை செய்கிறார்கள்.

இவர்களின் நட்பு அழைப்பே கேவலமாக இருக்குமாம். அதனை நாம் ஏற்க வேண்டுமாம். மகத்தான ஒரு தலைவரின் பெயரில் வந்த நட்பு அழைப்பை ஏற்று அந்த  போலியின் கேவலமான, வக்கிரமான, ஜாதிவெறிப் பதிவுகளை பார்க்க வேண்டிய அசிங்கம் உருவானது. 

ஆபாசத்தை வாந்தியெடுப்பதற்கு என்று சொல்லியே இவர் நட்பு அழைப்பு விடுப்பாராம். அதை நாம் ஏற்க வேண்டுமாம். இல்லையென்றால் கோழையாம்.

இப்படிப்பட்ட அற்ப ஜந்துக்களை ப்ளாக் செய்யாமல் கொஞ்சவா முடியும்?

இந்த அறிவு கூட இல்லையே!!!!

முரடர்களும் முட்டாள்களும் மட்டுமே நிரம்பியக் கூட்டமாக காட்சியளிக்கிறது காவிகளின் கூடாரம். 


 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete