Wednesday, December 14, 2016

மோடி= இந்திரா, ஷா= பரூவா




மோடியை விமர்சனம் செய்தால் அது என்னவோ இந்தியா மீதான விமர்சனம் என்று எடுத்துக் கொண்டு "இந்தியா மீது யாராவது விமர்சனம் செய்தால் நான் பொறுமையாக இருக்க மாட்டேன்" என்று பாஜக தலைவர் அமித் ஷா முழங்கியுள்ளார்.

மோடி இந்தியாவின் பிரதமராக இருப்பதாலேயே அவரை விமர்சித்தால் அது இந்திய நாட்டின் மீதான விமர்சனம் என்று அர்த்தமல்ல, மோடி ஒன்றும் இந்தியா கிடையாது என்று அவரிடம் யாராவது கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

இன்னொன்றும் சொல்லுங்கள்.

அவசரநிலைக்காலத்தின் போது அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.பரூவா மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்த வாசகம் என்ன தெரியுமா?

"இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா"

எப்படி அமித்ஷா இன்று மோடிதான் இந்தியா என்று சொல்கிறாரோ அதைத்தான் டி,கே.பரூவா அன்று சொன்னார். 

அப்படிச் சொன்ன டி.கே.பரூவா வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்பட்டு காணாமலேயே போய் விட்டார் என்றும் அமித்ஷாவிற்குச் சொல்லுங்கள்.

பின் குறிப்பு : 

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப்பட்டது. செல்லா நோட்டு பிரச்சினையால் நீண்ட காலம் டிராப்டிலேயே இருந்ததை இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த முழக்கங்கள் எவ்வளவு அபத்தமானது என்பதை தமிழகம் உணர்த்தி வருகிறது என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்/

No comments:

Post a Comment