Monday, December 5, 2016

என்ன நடக்குது அப்பல்லோவில்????




ஜெயா டி.வி தவிர மற்ற அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் ஜெ மறைந்தார் என்று சொன்னது. 

அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

என்.டி. டிவியும் சி.என்.என் தொலைக்காட்சியும் ஜெ இன்னும் உயிரோடு இருப்பதாக அப்பல்லோ ட்வீட்டை ஆதாரமாகச் சொல்லி தமிழக ஊடகங்கள் தவறான செய்தியை சொல்வதாக குற்றம் சுமத்தின.

இப்போது தமிழ் ஊடகங்களும் தங்கள் செய்தியை மாற்றி விட்டார்கள்.

கொடி முழுக்கம்பத்திற்கு மாறி விட்டது.

முதலில் வந்த செய்தி தவறென்றால் அதற்குக் காரணம் யார்?

என்னதான் நடக்கிறது அப்பல்லோவில்?

இன்னும் எத்தனை காலம் அது மர்ம மாளிகையாகவே இருக்கப் போகிறது?

எதுவாக இருந்தாலும் தயவு செய்து உண்மையை மட்டுமே சொல்லுங்கள்

 

No comments:

Post a Comment