Tuesday, November 29, 2016

தாத்தா கலக்குறார்பா !!!!!!!!!

கீழே உள்ள ஓவியங்களை எல்லாம் நன்றாகப் பாருங்கள்


















இவை எதுவும் கையாலோ, கணிணி கொண்டோ வரையப்பட்ட ஓவியங்கள் அல்ல.



பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான பால் ஸ்மித் என்ற இந்த முதியவர் டைப்ரைட்டர் கொண்டு உருவாக்கிய ஓவியங்கள்தான் இவை. 

அவரது விடா முயற்சிக்கும் உறுதிக்கும் கலைத்திறனுக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும்.  
 

மோடியின் முகத்தைக் காண்பிக்க

மோடியின் முகத்தைக் காண்பிக்க அவரது ஆட்சிக்கு வந்த நாள் முதல் செய்யப்பட்ட தொலைக்காட்சிக்கான விளம்பரங்களுக்கு மட்டும் செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

அதிகமில்லை ஜெண்டில் மேன் அன்ட் உமன் . . .

வெறுமனே ஒரு நாளைக்கு 1.40  கோடி ரூபாய்தானாம்.

இது அதிகாரபூர்வமான தகவல். தகவல் அறியும் சட்டத்தின் படி அரசே தந்துள்ள தகவல்.





 நாளிதழ் விளம்பரங்களுக்கான செலவு எவ்வளவு கோடியோ?

அப்படி என்னய்யா ஒரு விளம்பர மோகம்?

யார் காசுல யாருக்கு விளம்பரம்?

ஊதாரித்தனமான அரசாங்கம்.

இப்படி தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிச்சு காண்பிக்கிற முகத்தை ஏன்யா நாடாளுமன்றத்தில மட்டும் காண்பிக்க மாட்டேங்கறே?

அதுக்கும் காசு கொடுக்கனுமோ?

அங்க கூட டி.வி இருக்கே. அந்த டி.வி க்களில் இவர் முகம் அழகா தெரியாதோ?

இந்த லட்சணத்தில காவிங்க உபதேசம் செய்யவும், அடுத்தவங்களை விமர்சனம் செய்யவும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம வந்துடறாங்க. 

இந்த கேள்வியைக் கேட்டா முடக்கம். உஷார்

 தோழர் கருப்பு கருணா அவர்களின் முக நூல் கணக்கு முடக்கத்திற்கு காரணமாக இருந்த செய்தியும் அவர் எழுப்பிய கேள்வியும் கீழே உள்ளது. 

காவிகளால் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனம் பற்றி யாராவது கேள்வி கேட்டால் பதில் அளிக்க முடியாமல் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

அது சரி, நாடாளுமன்றத்திற்கு வராமல் ஓடி ஒளியும் மோடிக்கு ஜால்ரா அடிப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

இந்த லட்சணத்தில் ஒரு மோடி ஜால்ரா மனிதர் தோழர் பிடல் காஸ்ட்ரோ  பற்றி வேறு இங்கு வந்து பிரச்சாரம் செய்து விட்டு போகின்றார். 

அவருக்கு  காஸ்ட்ரோ பற்றியும் தெரியல. மோடி பற்றியும் தெரியலை. 

பின் குறிப்பு :

 பங்கசராகிப் போன 56 இஞ்ச் பலூன் - மாலையில்  


 இப்போது தோழர் கருணா வெளியிட்ட செய்தியையும் எழுப்பிய கேள்வியையும் படியுங்கள்.



 



பாருங்கய்யா...ரொக்கப்பரிவர்்த்தனையே வேணாம்ன்னு பிரதமரு கூவிக்கிட்டே இருக்காரு.இங்க இன்னாடான்னா...அவங்க கட்சிக்காரரே 20 லட்சத்தை ரொக்கமா பரிவர்த்தனை பண்ண கொண்டு போயிட்டிருக்காரு...

ங்கொய்யால...உபதேசம் ஊருக்குதானாலே..!

ஆமா...ஒத்த 2000 ரூவா நோட்டை வாங்குறதுக்கே இங்க அவனவன் கியூவுல நின்னு சாவுறான்...அண்ணாச்சிக்கு மட்டும் இம்புட்டு புதுநோட்டு எப்பிடி வந்துச்சி...ஒரு கியுவையே வெலைக்கி வாங்கிட்டாரோ...?

Monday, November 28, 2016

பணம் அல்ல, இந்த "கருப்பு" தான்



பாகிஸ்தான் மீதான துல்லியமான தாக்குதல் மூலமாக உடைந்து வரும் பிம்பத்தை ஒட்ட நினைத்த மோடி, அது கதைக்கு ஆகாததால் 1000, 500 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து சாதாரண மக்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தினார்.

மோடியின் ஜால்ராக்களாக இருக்கிற மூடர்கள் தவிர வேறு யாரும் ஆதரிப்பதில்லை. ஜெயமோகன், எஸ்.வி.சேகர் போன்ற காமெடியன்கள் சமூக வலைத்தளங்களில் எள்ளி நகையாடப்படுகிறார்கள். இரண்டரை வருடத்தில் மோடிக்கு நிகழும் மிகப் பெரிய அசிங்கம் இதுதான். 

அதனை காவிக்களால் ஜீரணிக்க முடியவில்லை. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயலும் பாசிச சக்திகள் அல்லவா?

அவர்களின் வெறிக்கு தற்போதைய பலி தோழர் கருப்பு கருணா வின் முகநூல் கணக்கு. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா, தொடர்ந்து மோடி வகையறாக்களை அம்பலப்படுத்தி வருகிறார். அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 12,000 க்கும் மேல் என்பது காவிகளின் பதட்டத்தை அதிகப் படுத்தி அந்த முகநூல் கணக்கை முடக்கி விட்டார்கள்.

கருப்புப் பணத்தை கைப்பற்றப் போவதாக கதையளந்தவர்களால் கருப்பு கருணாவின் முகநூல் கணக்கை மட்டும்தான் கைப்பற்ற முடிந்துள்ளது. 

மோடியால் இவ்வளவுதான் முடியும்.

மோடி கூட்டத்தாரின் முட்டாள்தனத்தை, அராஜகத்தை கண்டிப்போம்.
தோழர் கருணாவின் கணக்கை மீண்டும் செயல்படுத்து என குரல் கொடுப்போம்.


அவரு நாடு நாடா, நாம நாடோடியா



நேற்று இரவு ஒரு அவசரத் தேவைக்காக பணம் எடுக்க வேண்டியிருந்தது. வேலூரில் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் மாக தேடிப் பார்த்தும் எதுவும் திறந்திருக்கவில்லை. திறந்திருந்த ஒன்றிரண்டு ஏடிஎம்மிலும் பணம் இல்லை.

நாடோடி போல இந்தியர்கள் தங்களின் சொந்தப்பணத்தை எடுக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். பிச்சைக்காரர்களாக திரிய வைத்து விட்டார்.  இதற்கெல்லாம் காரணமான மனிதனோ வழக்கம் போல சொகுசாக நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார். 

ரொக்கமில்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறாராம். அடப்பாவி, ஏற்கனவே அதைத்தான் செய்து விட்டாயே, இனி என்ன புதிதாக செய்வதற்கு உள்ளது?

ஜியோவின் விளம்பரத்தூதராக இருந்தவர் 
இப்போது பேடிஎம் மிற்காக கூவுகிறார். 

இதற்கான விளம்பரத் தொகையை மோடி எப்படி வாங்கி இருப்பார்?

ரொக்கமாகவா? காசோலையா? இல்லை டிஜிட்டல் பரிமாற்றமா?

சஹாராவிடம் வாங்கிய 25 கோடியும் ஆதித்ய பிர்லாவிடம் வாங்கிய 60 கோடியும் எப்படி வாங்கினார் என்பதை சொல்வாரா?

அதையெல்லாம் விடுங்கப்பா,

பாஜக காரன் ஒத்தனிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருபது லட்ச ரூபாய் கிடைச்சுதே, அது எப்படி வந்தது?

பின் குறிப்பு : வெக்கம் கெட்ட காவிகள் விளக்கம் சொல்ல துப்பு இருந்தா பின்னூட்டம் போடுங்க. இல்லையென்றால்  . . . . . . . ..  
வெறியில இருக்கேன். ரொம்பவுமே அசிங்கப்படுவீங்க....

Sunday, November 27, 2016

புரட்சித்தலைவருடனான அனுபவங்கள்




(ஆகஸ்ட் 13-ம் தேதி தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளையொட்டி தேசாபிமானி மலையாள நாளிதழில் CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் DYFI அகில இந்தியத் தலைவரும், 1992-ல் கியூபா பாதுகாப்பு ஆதரவுக் குழுவின் அமைப்பாளராக செயல்பட்டவரும், கேரள முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான தோழர் M.A.பேபி எழுதிய கட்டுரை...அந்தக் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் தோழர்.M.A.பேபி, தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி மறுபதிவிட்டுள்ளார்...)

புரட்சி சூரியன்

638 முறை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஎ மற்றும் அவர்களது வழிகாட்டலின் பேரில் செயல்பட்ட மாஃபியாக்களும் கொலைசெய்ய முயற்சித்தும் உயிருடன் வாழும் புரட்சிநாயகன். வரலாற்றில் இடம்பிடித்த ஈடுஇணையற்ற அந்த புரட்சியாளரைப் பற்றிய நினைவுகள் மனதில் தனித்துவத்தோடு நிற்கக் காரணம் என்ன..? ஹவானாவில் இந்திய தூதரகத்தில் ஏற்பட்ட எனது அனுபவம் இது.

24 வருடங்களுக்கு முன்பு 1992 டிசம்பர் இறுதியில் “கரீபியன் பிரின்சஸ்” என்ற கப்பலின் மூலம் கொல்கத்தாவின் ஹால்டியா துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட 10,000 கிலோ கோதுமை மற்றும் 10,000 கிலோ அரிசியுடன் ஹவானா துறைமுகத்தை அடைந்த போது அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாங்கள் சென்றிருந்தோம். தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித், முன்னாள் கம்யூனிஸ்ட் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான மரியாதைக்குரிய மறைந்த கே.என்.சிங் மற்றும் நான் ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தோம். நிகழ்ச்சியில் தோழர்கள். ஃபிடல் காஸ்ட்ரோ, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர் உரையாற்றினார்கள். ஓவியர் எம்.எஃப்.ஹுசைனின் மகன் ஷம்ஷாத் ஹுசைன் வரைந்தஃபிடலின் ஓவியத்தை தோழர். ஃபிடலுக்கு பரிசளித்தோம். தனது படத்தை தோழர். ஃபிடல் ஒரு சிறு குழந்தையின் களங்கமற்ற குதூகலத்துடன் ஆச்சரியமாகப் பார்த்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தோழர். ஃபிடலின் அலுவலகத்தில் அவரை சந்திக்கச் செல்லும்படி மொழிபெயர்ப்பாளர் எங்களிடம் கூறினார். சுமார் இரண்டரை மணிநேரம் நீண்ட ஒரு உரையாடல் எங்களுக்காக காத்திருந்தது. அதைப்பற்றி பின்னர் கூறுகிறேன்.

அதற்கடுத்த தினம் தூதரகத்தில் இரவு உணவின் போது, அந்த சூடான, ஆச்சரியப்படுத்தும் செய்தி வெளியாகியது...சிறிது நாட்களாக தனது சக தோழர்களிடம், தோழர். ஃபிடல் ஒரு வேண்டுகோளை உறுதியாகக் கூறி வருகிறார்...மிக நீண்டகாலமாக தலைமைப் பொறுப்பில் செயல்பட்டு வரும் தனக்கு ஓய்வு அளிக்க ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதே, அந்த வேண்டுகோள்... சக தோழர்கள் இதை ஒத்துக்கொள்ளவில்லை. தோழர். ஃபிடல் அந்த பொறுப்பில் நீடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் தோழர். ஃபிடலும் தனது வேண்டுகோளை பிடிவாதமாக வலியுறுத்தி வந்தார்.

20-வது வயதில் தொடங்கிய அரசியல் போராட்டங்கள்...நாற்பதாண்டுகள் நீண்ட தலைமைப்பொறுப்புகள் என்றெல்லாம் அறுபது வயதுகளில் இருந்த தோழர். ஃபிடல், தனது ஓய்வுக்கான காரணங்களாகக் கூறினார். சுமார் 35 வருடங்கள் அரசின் தலைமைப் பொறுப்புகளையும் அன்றையதினம் நிறைவேற்றி முடித்திருந்தார். ஓய்வு பெறுவதற்காக விடாப்பிடியான வாதங்கள் செய்துவந்த தோழர். ஃபிடல், தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் சுறுசுறுப்பான செயல்பாட்டைக் நேரில் கண்டதோடு ஓய்வுபெறும் முடிவைக் கைவிட்டார். தோழர்.சுர்ஜித்துக்கு தோழர். ஃபிடலைவிட 10 வயது அதிகம். 2008 வரை ஆட்சிப் பொறுப்பிலும், 2011 வரை கட்சிப் பொறுப்புகளிலும் தொடர தோழர். ஃபிடலுக்கு தோழர்.சுர்ஜித் முன்மாதிரியாக இருந்தார் என்பது இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

90 வயதான தோழர். ஃபிடல் 5 வருடங்களுக்கு முன்பு கட்சியின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். 8 வருடங்களுக்கு முன்னால் அரசுப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். தங்களால் இயன்ற வரையிலும் கட்சிக்கும் நாட்டுக்கும் கடினமாக உழைப்பதே எல்லா கம்யூனிஸ்டுகளின் கடமை, அதேநேரம் உடல்ரீதியான இயலாமை ஏற்படும்போது பிரதான பொறுப்புகளை மற்ற தோழர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற செயல்பாட்டு அணுகுமுறையின் கம்யூனிச உதாரணமே தோழர். ஃபிடல் காஸ்ட்ரோ என்ற மகத்தான கம்யூனிஸ்ட்.

1978-ல் உலக வாலிபர்-மாணவர் சங்கமம் ஹவானாவில் நடந்தபோது, 52 வயதான தோழர். ஃபிடல் காஸ்ட்ரோவை முதன்முதலாக சந்தித்தேன். பிரகாஷ் காரட், பிமன் பாசு, மாணிக் சர்க்கார், உத்தப் பர்மன், இந்திராணி மஜும்தார் முதலிய தோழர்கள் எங்கள் இந்தியக் குழுவிலிருந்தனர். கேரளத்திலிருந்து டி.பி.தாசன், முல்லைப்பள்ளி ராமச்சந்திரன், ராமு காரியாட், டி.வி.பாலன், முதலியவர்களும் எங்கள் குழுவில் இருந்தார். நிகழ்வின் கடைசி தினத்தில் பிரம்மாண்டமான “லெனின் பூங்கா”வில், கலந்து கொண்ட பிரதிநிதிகள் சுதந்திரமாக கலந்துரையாடவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கிடையில் தோழர். ஃபிடல் எங்கள் முன்னே திடீரென தோன்றி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன்பிறகு ஏற்பட்ட அனுபவமே நான் முதலில் குறிப்பிட்டது. சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ஏறத்தாழ மூன்று மணிந்நேரம் தோழர்.சுர்ஜித்துடன் நடந்த உரையாடலுக்கு நான் சாட்சியம் வகித்தேன். “எங்கள் நாட்டுக்கு நீங்கள் கொண்டுவந்த இந்த பொருளுதவிக்கு பதிலாக, இந்தியாவுக்கு நாங்கள் என்ன திரும்பத் தரவேண்டும்..?” தோழர். ஃபிடலின் இந்த கேள்விக்கு தோழர்.சுர்ஜித் இவ்வாறு பதிலளித்தார். “மிகவும் எளிமையான இந்த பொருளுதவி எங்கள் மானசீக ஆதரவின் அடையாளமேயாகும். இந்திய மக்கள் எல்லோரும், தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் உங்களுக்கு பின்னால் நங்கள் அணிவகுத்து நிற்கிறோம். நங்கள் செய்த இந்த உதவி அரசியல் ரீதியான, சர்வதேச உணர்வினால் ஏற்பட்ட உந்துதலினால் மட்டுமே நடந்தது. அதோடு கம்யூனிஸ்டுகள் என்ற முறையில் இது எங்களது கடமையுமாகும். இதில் கம்யூனிஸ்டுகள் அல்லாதவர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ்காரரான கே.என்.சிங் எங்களுடன் இருப்பதும் அதன் ஒரு பகுதியே ஆகும்.” என்று மிகப் பொருத்தமாக எங்கள் பிரதிநிதிக்குழுவின் தலைவர் தோழர். சுர்ஜித் பதிலளித்து முடித்தவுடன், நான் சின்ன விஷயம் ஒன்றைக் கூறட்டுமா என்று தோழர்.சுர்ஜிதிடம் கேட்டேன். இவர் என்ன வீண் ஜம்பம் பேசப் போகிறாரோ என்றவாறு என்னை ஒருகணம் பார்த்துவிட்டு, இருப்பினும் நான் கியூபா பாதுகாப்பு ஆதரவுக் குழுவின் அமைப்பாளர் அல்லவா..சரி சொல்லுங்கள் என்று என்னைப் பேச அனுமதி தந்தார். 

கியூபாவிலிருந்து பிரதிபலன் ஏதும் எதிர்பார்த்து நாங்கள் இந்த உதவியைச் செய்யவில்லை என்ற தோழர். சுர்ஜித்தின் வார்த்தைகளை அடியொற்றி, “விளையாட்டு, கலை, கலாச்சாரத் துறைகளில் சில உதவிகள் கியூபாவிலிருந்து கிடைத்தால், கியூப ஆதரவுக் குழுவின் செயல்பாட்டை ஜனரஞ்சகமாகவும், மேலும் உறுதிப்படுத்தவும் உதவும் என்றும் கூறினேன். உதாரணமாக, 1992 (ஜூலை-ஆகஸ்ட்) ஒலிம்பிக்கில் அனைத்து முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி கியூபா 5-ம் இடத்திற்கு முன்னேறியதைக் குறிப்பிட்டேன். சில காட்சி ரீதியான விளையாட்டுப்போட்டிகளை நடத்தலாம் என்று கூறினேன்.

இதைக்கேட்ட தோழர். ஃபிடல் பலமாகச் சிரித்தார். “இந்திய-கியூப விளையாட்டுப் போட்டிகளில் நாம் கவனமாக இருக்கவில்லையெனில் இந்திய-கியூப நல்லுறவே சிதைந்துவிடும். காரணம், குத்துச் சண்டையிலும் மல்யுத்தத்திலும் கியூபாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்களுக்கு போட்டிகளுக்கிடையில் காயம் ஏற்பட்டால் நம்மையெல்லாம் அது வேதனைப்படுத்தாதா..?” என்று கூறி உடல் குலுங்கக் குலுங்க பலமாகச் சிரித்தார். நாங்களும் அவருடன் சேர்ந்து சிரித்தோம். மேலும் ”எங்கள் கால்பந்து அணி பலவீனமானது. அவர்களை அனுப்புவதே சிறந்தது. இந்திய கால்பந்து அணி கியூப அணியைத் தோற்கடிக்க முடியும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

“தோழர்! உங்கள் நண்பரான எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்யேசை இந்தியாவில் நடக்கும் கியூபா ஆதரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்ய இயலுமா?” என்று எனது அடுத்த கேள்வி வந்தது. “மிகவும் சிரமமான வேலை” என்று கூறி மிகவும் பலமாகச் சிரித்தார். மார்க்வேஸ் விமானப் பயணத்திற்கு அஞ்சுபவர். டெல்லியில் நடந்த அணிசேரா அமைப்பின் மாநாட்டிற்கு வரும்போது கயிற்றால் கட்டி இழுத்தது போன்று அவரை வற்புறுத்தியதால், தயங்கித் தயங்கியே விமானத்தில் ஏறினார் என்ற கதையைக் கூறினார்.

“சரி நீங்கள் கொரியேரியுடன் பேசிப்பாருங்கள்” என்று தோழர். ஃபிடலே ஒரு விஷயத்தை முன்மொழிந்தார். மறைந்த மரியாதைக்குரிய கொரியேரி கியூபா ஆதரவு இயக்கத்தின் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், பிரபல நடிகரும் ஆவார். “நான் அவரிடம் பேசிவிட்டேன். அவரது வழிகாட்டுதல்படியே நான் தங்களிடம் இதுபற்றி பேசுகிறேன் தோழர்!” என்று நான் கூறிய உடன் “சரி...நடக்குமா என்று தெரியவில்லை” என்று தன்னைத்தான் கூறியவாறே ஆழ்ந்த சிதனையில் மூழ்கினார்.

பின்னர் சர்வதேச அளவில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் அந்த இதிகாசநாயகனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் நிகழ்வில் துவக்கம் முதல் இறுதிவரை விவாதங்களை கூர்ந்து கவனித்தும், சிற்சில விஷேச விவாதங்களில் குறிப்புகளை எழுதிக் கொடுத்துக் கொண்டே சபையிலிருக்கவும் செய்த தோழர். ஃபிடல், எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும், வரலாற்றை உருவாக்குபவரின் அழியாத ஓவியத்தையே பிரதிபலிக்கிறார். தோழர். ஃபிடலும் சேகுவேராவும் கியூப மக்களின் வாழ்க்கையையும், இலத்தீன் அமெரிக்காவின் அரசியலையும் எப்படி புரட்டிப்போட்டார்கள் என்பது ஒரு வீரமிக்க வரலாறு.

சே குவேராவுடன் சேர்ந்து இலத்தின் அமெரிக்காவையும் அதன் மூலம் உலகத்தையும் தலைகீழாக புரட்டிய ஈடுஇணையற்ற புரட்சிநாயகனான தோழர். ஃபிடல் வழக்கமாக எழுதும் கட்டுரைகளில் கவனமாக கையாளும் வார்த்தைகள் மூலம் உலகின் தாறுமாறான நிகழ்ச்சிபோக்குகளை எளிமையாக கூறிவருகிறார். அமெரிக்காவுடனான கியூபாவின் உறவு எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கேள்விக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னால் அவர் அளித்த, தீர்க்கதரிசனமான பதில் இன்று பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. 

 “அமெரிக்காவுக்கு கறுப்பின அதிபரும், வாடிகனுக்கு இலத்தீன் அமெரிக்க போப்பும் வருகிற போது அமரிக்கா-கியூபா உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்று அன்றைய தினம் அந்தக் கேள்விக்கு தோழர். ஃபிடல் பதிலளித்திருந்தார். சுரண்டலற்ற ஒரு உலகத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் போராட்ட நெருப்பும், ஒளியும் கொடுக்கும் உந்துசக்தியின் கோபுரங்களாக தோழர்கள். ஃபிடலும் சேகுவேராவும் இருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தால் கொலை செய்யப்படாது இருந்திருந்தால், 88 வயதான சேவும், தனது மூத்த சகோதரனின் இடத்திலுள்ள ஃபிடலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துசொல்ல இருந்திருப்பார்.

இப்பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்ட தோழர் SadanThuckalai அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

படித்து நெகிழ்ந்து ரசித்த மொமெண்ட்


எங்களின் மதுரைக் கோட்டத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், மறைந்த இசை மேதை பாலமுரளி பற்றி எழுதி தீக்கதிரில் இன்று பிரசுரமாகி உள்ளதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

பாலமுரளி கிருஷ்ணா பற்றிய அவரது கட்டுரை நெகிழ வைத்தது. அதிலே குறிப்பிட்டுள்ள பாடல்களை யுட்யூப் சென்று பார்க்கையில் மனது கொஞ்சம் இதமானது. 

மூன்று துயரங்கள் அளித்த  மன அழுத்தத்தைப் போக்க பாலமுரளியின் இசை  உதவியது. 




 கடைசி வரை மறக்காத சங்கீதம்

ச.சுப்பாராவ்
 
குழந்தை மேதைகள் பெரியவர் களாக வளர்ந்த பிறகு பேரும் புகழும் பெற்று ஒளிராமல் காலவெள்ளத்தில் எங்கோ ஓரமாக ஒதுங்கி விடுவதுண்டு. குறிப்பாக இது கர்னாடக சங்கீத இசையுலகில் பல முறை நிகழ்ந்திருக்கிறது. குழந்தை வித்வானாகப் புகழ் பெற்றவர்கள் வளர்ந்த பிறகு ஏதோ தன்னளவில் கச்சேரி செய்து கொண்டு இருப்பதாகவே அமைந்துவிடுகிறது. வீணை காயத்ரி.சித்ரவீணைக் கலைஞர்களான ரவிகிரண், சசிகிரண் சகோதரர்கள், மாஸ்டர் சங்கரன் நம்பூதிரி என்று பல உதாரணங்கள் உண்டு. குழந்தை வித்வான்கள் பெரியவர்களான பின் சோபிப்பதில்லை என்ற எழுதப்படாத விதியை உடைத்துத் தூளாக்கியவர் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா.

பாலமுரளி கிருஷ்ணா தன் தாயாரின் கருவிலிருந்தபோது, தாயார் சூரிகாந்தம்மா மணிக்கணக்காக வீணை வாசித்தபடி இருந்தாராம். “ஏன் இப்படி சிரமப்பட்டு வாசிக்கிறாய்,” என்று கேட்டால் “என் குழந்தைக்கு பாட்டுச் சொல்லித் தருகிறேன்,” என்பாராம். குழந்தை பிறந்த பதின்மூன்றாம் நாள் தாயார் காலமானார். ஆனால் அதற்கு முன்னரே கருவிலேயே தன் குழந்தைக்கு நிறைய சங்கீதம் கற்றுத் தந்துவிட்டார். 

கருவில் கற்ற அந்தக் குழந்தை பாலமுரளி தன் எட்டாவது வயதில் மூன்று மணிநேரக் கச்சேரி செய்தது. பதினான்காவது வயது தொடங்கி, பதினாறாம் வயதிற்குள் கர்னாடக இசையின் தாய் ராகங்களான 72 மேளகர்த்தா ராகங்களிலும் , அந்த ராகங்களின் ஜீவனைக் காட்டும்படியான பாடல்களை அவர் இயற்றிவிட்டார். இத்தனைக்கும் அவர் ஆறாம் வகுப்பில் ஒரு மாதம் வரைதான் படித்தார். தானாகவே வயலின், வயலின் குடும்பத்தைச் சேர்ந்த சற்றே பெரிய அளவிலான வயோலா, மிருதங்கம், கஞ்சிரா என்று பல வாத்தியங்களையும் கச்சேரி செய்யுமளவு வாசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டார். 

செம்மங்குடி சீனிவாச அய்யர் தனது முதிர்ந்த வயதில் செய்த ஒரு கச்சேரிக்கு பாலமுரளி கிருஷ்ணா வயோலா வாசிக்கும் ஒரு அபூர்வமான, அற்புதமான காணொளி யூ ட்யூபில் கிடைக்கிறது. பதினோராவது வயதில் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் அரை மணிநேரக் கச்சேரி செய்யும் வாய்ப்பு. பாலமுரளிகிருஷ்ணா பாடுவதைக் கேட்டு அடுத்த கச்சேரி செய்ய வந்திருந்தவரான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தனக்கான நேரத்திலும் பாலமுரளியே பாடட்டும் என்றார். இப்படியாக பாலமுரளி ஒரு மணிநேரம் பாட, அடுத்துப் பாட இருந்த மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் தனது நேரத்திலும் பாலமுரளியே பாடட்டும் என்று விட்டுக் கொடுத்தார். 

முதன்முறையாக திருவையாற்றில் பாட வந்த அந்தச் சிறுவனுக்காக சங்கீத உலகின் ஜாம்பவான்கள் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்ட அந்த ஆச்சரியகரமான சம்பவம் நடந்தது 

1941ல்.வானொலி நிலையத்தில் நிலைய வித்வான் வேலைக்கு மனுச் செய்தார் பாலமுரளி கிருஷ்ணா. பாடச் சொல்லிக் கேட்டார்கள். அன்று வானொலியில் அதிகபட்ச சம்பளம் 90 ரூபாய். பாலமுரளி 100 ரூபாய் கேட்டார். மேலிடத்திற்கு எழுதிக் கேட்பதாகச் சொல்லி அனுப்பினார்கள். சில நாட்களுக்குப் பிறகு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது. சம்பளம் 250 ரூபாய்! பின்னர் விஜயவாடா வானொலி நிலையத்தின் மெல்லிசைத் துறை பொறுப்பாளராக ஆக்கப்பட்ட போது சம்பளம் ரூபாய் 450. மாவட்ட ஆட்சியர் சம்பளத்தை விட அதிகம். இதெல்லாம் 1952ல் அவரது 22வது வயதில் நடந்தவை.பெரிய பெரிய அங்கீகாரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. 

ஆனால் பாலமுரளி கிருஷ்ணா என்ற கலைஞர் சங்கீதத்திற்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவராக, புது முயற்சிகள் செய்பவராக மட்டுமே இருந்தார். அக்காலத்தில் நல்ல களையான முகம் கொண்ட சங்கீதக்காரர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம். பாலமுரளியும் ‘பக்த பிரகலாதா’ என்ற படத்தில் நாரதராக நடித்தார். (இப்படத்தை அடிக்கடி முரசு, சன்லைஃப் சானல்களில் போடுகிறார்கள்). தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்ற நான்கு மொழிகளில் வெளிவந்த படம். ஆனால் மனம் முழுக்க இசை மட்டுமே நிரம்பியிருந்ததால்,அவர் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே ‘சதி சாவித்திரி’ என்ற படத்தில் பல பாடல்கள் பாடிவிட்டார். 

உடன் பாடியது அவரது சீடர் எஸ். வரலட்சுமி. ஆம், திரைத்துறையின் பல பிரபலங்கள் அவரிடம் சங்கீதம் பயின்றவர்கள்தான். எஸ். வரலட்சுமி, பி. லீலா, வைஜெயந்திமாலா, ஜெயச்சந்திரன், கமலஹாசன் என்று பெரிய சீடர் படை அவருக்கு உண்டு.‘கலைக்கோவில்’ (1962) படத்தில் அவர் ஆபோகி ராகத்தில் பாடிய ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் மூலம் அவர் திரையிசையின் நட்சத்திரப் பாடகரானார். உண்மையான சங்கீதக் கலைஞரான, உபாசகரான அவருக்கு சாஸ்திரிய இசை, சினிமா இசை என்ற பேதங்கள் எல்லாம் கிடையாது என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. அதே போல பெரும் சங்கீத வித்வான்களுக்கே உரித்தான ஞானச் செருக்கும் கிடையாது. 

இன்று பலரும் தம் அஞ்சலிக் குறிப்புகளில் தவறாது குறிப்பிடும் “ஒரு நாள் போதுமா” பாடலை அவர் பாடியதே அதற்குச் சான்று. கே.வி. மஹாதேவன் முதலில் அப்பாடலைப் பாட சீர்காழி கோவிந்தராஜனைத்தான் ஏற்பாடு செய்திருந்தார். கதைப்படி தோற்றுப் போகும் பாடகனுக்குப் பாட சீர்காழி மறுத்துவிட்டார். பின்னர்தான் பாலமுரளி கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டார்கள். ஏன் முதலிலேயே என்னைக் கூப்பிடவில்லை என்பது போலெல்லாம் சொல்லாமல் தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார். அதுமட்டுமில்லாமல், ராகங்களின் பெயர் வரும் வரிகளுக்கு அந்த ராகங்களின் சாயல் தெரியுமாறு மெட்டுப் போட்டதும் அவர்தான். பாடலின் வெற்றி பற்றி தனியே சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் என திரையிசைக்காக தேசிய விருதுகள் வாங்கியவர் அவர். ஆனாலும், பெரிய நட்சத்திரங்களுக்குத்தான் பாடுவேன், பெரிய நிறுவனங்களின் படங்களில்தான் பாடுவேன் என்றில்லாமல், நல்ல இசை என்ற ஒரே காரணத்திற்காகப் பாடிக் கொடுத்திருப்பது அவரது தனிச்சிறப்பு. அப்படித்தான் ‘சாது மிரண்டால்’ படத்தில் “அருள்வாயே நீ” என்ற பாடலை டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பாடினார். இது விஸ்வநாதனை விட்டுப் பிரிந்தபிறகு ராமமூர்த்தி தனியாக இசையமைத்த அற்புதமான சிந்து பைரவி. ‘அபூர்வ ராகம்’ படத்திற்கு “அதிசய ராகம் ஆனந்தராகம்” பாடலை ஒரு அபூர்வமான ராகத்தில் போட வேண்டும் என்று பாலச்சந்தர் விரும்பியபோது, எம்.எஸ். விக்கு ஸ ,க, ப, நீ, என்ற நான்கே ஸ்வரங்கள் கொண்ட மஹதி என்ற அபூர்வ ராகத்தைக் கற்றுத்தந்தார். ‘திசை மாறிய பறவை’ என்ற படத்தில் “அருட்ஜோதி தெய்வம்” என்ற பாடலை ஜி.சீனிவாசனுக்குப் பாடினார். 

அதற்கும் மேலாக ‘மிருதங்கச் சக்ரவர்த்தி’ படத்தில் அவர் பாடிய “இது கேட்கத் திகட்டாத கானம்” பாடல் நம்பியாருக்கு! நண்பர் குன்னக்குடி வைத்தியநாதனுக்காக ‘நவரத்தினம்’ படத்தில் “ஏதாவுனாரா” என்ற கல்யாணி ராகத்தில் தியாகராஜ கீர்த்தனையையும், “குருவிக்காரன் பொஞ்சாதி” என்ற குத்துப் பாட்டையும் பாடிக் கலக்கினார்.மிக அரிதான ராகமான ரீதிகௌளையில் இளையராஜாவிற்காக அவர் பாடிய “சின்னக்கண்ணன் அழைக்கிறான்,” எம்.எஸ்.வி.க்காக சாமா ராகத்தில் “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே” (இது மானஸ சஞ்சரரே யின் உல்டா) இரண்டு மட்டுமே பரவலாகத் தெரிந்தாலும் அவர் சங்கர் கணேஷ் இசையில் “ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே” (உயர்ந்தவர்கள் 1977) என்று பாடியிருக்கிறார். ‘தெய்வத் திருமணங்கள்’ என்ற படத்தில் “தங்கம், வைரம், நவமணிகள்” என்று வாணி ஜெயராமுடன் டூயட்டும் பாடியிருக்கிறார். 

சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், செவாலியே என்று எத்தனையோ பட்டங்கள் வாங்கினாலும் கூட, புதிய, இளைய திறமையாளர்களைப் பார்த்து மனம் விட்டுப் பாராட்டும் பரந்த மனம் அவருடையது. ஜேம்ஸ் வசந்தனின் ரீதிகௌளை பாடலான “கண்கள் இரண்டால்” பாட்டில் மயங்கி, அவரிடம், “உன் அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் கொடு. கிழவன் என்று நினைக்காதே. நல்லபடியாகப் பாடித் தருகிறேன்,” என்று தானாகப் போய் சான்ஸ் கேட்ட குழந்தை மனது. 

அப்படித் தானாகக் கேட்டு அவர் பாடிய பாட்டு ‘பசங்க’ திரைப்படத்தின் “அன்பாலே அழகாகும் வீடு” என்ற சுகமான பாடல். அப்போது அவருக்கு வயது 79 !தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராணிமைந்தனிடம், “வாழ்வின் பல சுவையான சம்பவங்கள் எனக்கு மறந்து போய்விட்டன. ஏதோ சங்கீதம் மறக்காமல் இருந்தால் சரி,” என்றாராம்! அதுபோலவே கடைசி வரை அவருக்கு சங்கீதம் மறக்கவில்லை. நம்மாலும் அவரது சங்கீதத்தை என்றுமே மறக்க முடியாது.


செம்மங்குடிக்கு பாலமுரளி வயலின் வாசித்த கச்சேரி இங்கே 

ஆங்கிலம், கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி என்று  மூன்று மொழிகளில் கலக்கும் நவரத்னம் பாட்டு இது. குருவிக்கார மச்சான் பாட்டை முந்தைய பதிவிலேயே கொடுத்துள்ளேன்.





Saturday, November 26, 2016

மகத்தான புரட்சித்தலைவருக்கு . . . .



செவ்வணக்கம் தோழர் பிடல் காஸ்ட்ரோ



கியூபப் புரட்சியின் தலைவரான தோழர் பிடல் காஸ்ட்ரோவின் மரணம் அதிர்ச்சியும் துயரமளிக்கிறது.

சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி சோஷலிச ஆட்சியை மலர வைத்தவர்.

பசிப்பிணியை முற்றிலும் போக்கியவர். 

அனைவருக்கும் கல்வி என்பதை உறுதி செய்தவர்.

மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் விரிவுபடுத்தியவர்.

குழந்தைகள் இறப்பு விகிதத்தை உலகிலேயே மிகவும் குறைவாக மாற்றிக் காட்டியவர்.

பொருளாதாரத் தடைகள் என்று புரட்சியை முடக்க நினைத்தாலும் அதை முறியடித்தவர்.

அவரை கொலை செய்ய நடந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய் இன்று அவரை இயற்கையால் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து சோஷலிச சக்திகளுக்கும் ஆதர்ஸம்.

சோர்வுறும் தருணங்களில் நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரையைக் கொண்ட “வரலாறு என்னை விடுவிக்கும்” நூலை படித்தால் போதும். எழுச்சியும் வேகமும் உடனடியாய் கிடைக்கும்.

மகத்தான புரட்சித்தலைவருக்கு செவ்வணக்கம்

மோடியின் புதிய "அரசியல் சாசன" நாடகம்

இன்றைய தினத்தை அரசியல் சாசன தினமாக அனுசரிக்க மத்தியரசு முடிவு செய்துள்ளதாம். அரசியல் சாசன முகப்பில் சொல்லப்பட்டுள்ள உறுதிமொழியை அனைத்து மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். 

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்து விட்டது. அரசியல் சாசனத்திற்கு எதிராக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் அரசியல் சாசன தினம் என்று கொண்டாடுவது எவ்வளவு பெரிய மோசடி?

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு தலித் மக்களின் பிரச்சினைகள பிரத்யேகமாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. அதற்காக நாடெங்கிலும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

மோடி அரசாவது தலித் மக்களுக்காகவோ அல்லது அண்ணல் அம்பேத்காருக்காகவோ சிறப்பு கூட்டத் தொடர் நடத்திடுமா என்ன?

திடீரென அரசியல் சாசன தினம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து இரண்டு நாள் நாடகம் நடத்தியது. மோடியும் ராஜ்நாத்சிங்கும் அரசியல் சாசனம் பற்றி பேசுவதற்குப் பதிலாக மனுதர்மத்தையே பேசினார்கள், புகழ்ந்தார்கள். அவர்களின் கொள்கைப் பிரகடனம் மனு தர்மம்தானே.

தோழர் சீதாராம் யெச்சூரியின் அற்புதமான உரை மட்டுமே அந்த கூட்டத் தொடரால் கிடைத்த ஒரே பலன். தமிழாக்கம் செய்யப்பட்ட  உரையின் முதல் பகுதி   இரண்டாம் பகுதி  இரண்டின் இணைப்பின் கொடுத்துள்ளேன். முதல் பகுதியில் காணொளியின் இணைப்பு உள்ளது. 

சரி, அரசியல் சாசன தினம் அனுசரிக்க அருகதை மோடி அரசுக்கு உண்டா?



என்ன சொல்கிறது இந்திய அரசியல் சாசனம்?

இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்ற குடியரசு நாடு என்றும் அனைத்து மக்களுக்கும் நீதி, சமூக, பொருளாதார, அரசியல், கருத்துச் சுதந்திரம் அளிப்போம் என்றும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் இந்திய அரசியல் சாசனம் உறுதியளிக்கிறது.

இறையாண்மையை அமெரிக்காவிடம் சரணடைய வைத்து விட்ட,
சோஷலிசம் என்றால் என்னெவென்றே தெரியாத,
மதச்சார்பின்மைக்கு நிரந்தர ஆபத்தாக இருக்கிற,
கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயல்கிற,
உணவு உரிமையைக் கூட கேள்விக்குறியாக்குகிற,
ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிற,
சமமின்மையை மேலும் மேலும் அதிகரிக்கிற 

மோடி அரசுக்கு அரசியல்சாசன தினம் கொண்டாடும் அருகதை எங்கே இருக்கிறது?

அரசியல் சாசனத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்திற்கு முதலில் மோடி ஒழுங்காய வரட்டும். அங்கே பேசட்டும். 

அரசியல் சாசன தினம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்



Friday, November 25, 2016

ஜெமோ அபத்தம் – வரிக்கு வரி பதிலடி



மோடியின் மூடத்தனமான “சாதாரண மக்கள் மீதான துல்லிய தாக்குதல்” குறித்த ஆசானின் கட்டுரையை அவரது அபத்தங்களில் இதுவும் ஒன்று என ஒதுக்கி வைக்கத்தான் நினைத்தேன். பக்கம் பக்கமாக  எழுதியதை படிப்பதிலேயே விரயமாகும் நேரத்தை, அவருக்கு பதில் சொல்லி இன்னும் விரயமாக்க வேண்டுமா என்றும் நினைத்தேன். வேறு ஒரு தோழருக்குக் கூட  அப்படித்தான் பின்னூட்டம் போட்டேன்.

ஆனால் கட்டுரையின் இறுதிப்பகுதியில் அவர் முன் வைத்திருக்கிற ஒரு வாதம் கேவலமானது. அப்பட்டமான மத வெறியை வெளிப்படுத்தி உள்ளார். ஆகவே பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி விட்டார்.

இந்த அரசின் முயற்சியால் ஒரு பலனும் வரப் போவதில்லை என்று பொருளாதார நிபுணர் பேராசியர் பிரபாத் பட்னாயக்  அவர்களின் கட்டுரையை ஏற்கனவே இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். அதற்கு மேல் தெளிவாக விவரிக்க வேறு எதுவும் அவசியமில்லை என்பதால் ஆசானின் அபத்தங்களுக்கு பதிலடி என்ற அளவில் மட்டுமே இப்பதிவு அமையும்.

சிவப்புக் கலரில் இருப்பது ஆசானின் மேதமை வாய்ந்த கருத்துக்கள் என்றால் நீல நிறத்தில் இருப்பது எனது பதிலடி. ஆசானுக்கு சிவப்பும் பிடிக்காது, நீலமும் பிடிக்காது. காவியை ஒழிக்க சிவப்பும் நீலமும் இன்று ஒன்றிணைந்து போராடுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் இந்த நிறங்கள்.

இந்த பதிவை ஆசானுக்கு மின்னஞ்சலில் அனுப்பப் போகிறேன். பதில் வந்தால் பகிர்ந்து கொள்வேன். ஆனால் அனாமதேயங்களாக காவிக்கோழைகள்  நிறைய பேர் நிச்சயம் வருவார்கள்.

நரேந்திர மோடி வென்று வந்தபின்னர் நான் எப்போதும் மெல்லிய ஐயத்துடனேயே அவரை அணுகிவந்தேன்.

மோடியின் ஆட்சியைப் பற்றி மட்டுமல்ல, உங்களுடைய எழுத்துக்களையும் கூட கொஞ்சம் கூட ஐயமில்லாமல்தான் அணுகினோம். கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி? இருவருமே நாகரீக சமுதாயத்தை கெடுக்க வந்த நோய்க்கிருமிகள்தானே!

அதேபோல எனக்கு எப்போதுமே வலதுசாரி , மதவாத அடிப்படைவாதிகளைப்பற்றிய ஐயம் உண்டு. அவர்கள் இந்தியாவில் பல்லாயிரமாண்டு காலமாக இருந்துவரும் நிலைச்சக்தியின் இன்றைய வடிவம். ஒரு தொன்மையான பண்பாடு, சமூகம் அப்படித்தான் இருக்கமுடியும். அது மாற்றங்களை மறுக்கும் மனநிலை கொண்டிருப்பது இயல்பே

அந்தத்தரப்பினரின் மூர்க்கமான சமத்துவ மறுப்பு, நவீனத்துவ எதிர்ப்பு மேல் எப்போதும் எனக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு.

இப்படி சொல்லிக் கொண்டே அவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் தவறுகளுக்கு முட்டு கொடுப்பதும் அவர்களை கண்டிப்பவர்களை வசை பாடுவதையும் பிரச்சினைகளை திசை திருப்புவதையுமே “அறம்” என கொண்டுள்ளீர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை?

அத்துடன் மோடி எதிர்பாளர்கள் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.

அதனால்தான் அவர்களை ஒழிப்பதையே இலக்காக கொண்டுள்ளீர்கள் அல்லவா?

இன்றும் அந்நம்பிக்கை நீடிக்கிறது.

அப்படியெல்லாம் எங்களை ஒழித்து விடலாம் என்றெல்லாம் மூட நம்பிக்கை கொள்ளாதீர்கள்.


வரலாற்றின் இத்தருணத்தில் இப்படி நடந்துகொண்ட குறுகியபுத்திக்காக அவர்களில் சிலராவது நாளை வருந்துவார்கள். இன்று என்னை முத்திரை குத்துவார்கள். செய்யட்டும்

உங்களை குறுகிய புத்திக்காரன் என்று சுய விமர்சனம் செய்து கொண்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. உங்களுக்கு இந்த முத்திரை மட்டும் போதாது.  இன்னும் அதிகமாகவே பட்டம் அளிக்க வேண்டும் ஆசானே.

இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன்பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்

கள்ளப்பணம் உள்ளவர்கள் எல்லாம் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் மர்மம் என்னவென்று கூட எங்களுக்கும் புரியவில்லை. பிரச்சாரத்திற்கும் மோசடிக்கும் வித்தியாசம் தெரியாத “அறம்” பேசும் எழுத்தாளர்களையும் பார்த்ததில்லை. மூடத்தனமான ஒரு நடவடிக்கைக்கு முட்டு கொடுத்ததையும் கண்டதில்லை.


சீதாராம் எச்சூரியும் பிரகாஷ் காரத்தும் கொந்தளிப்பதைப் புரிந்துகொள்ள நாம் இதுவரை அறிந்த வரலாற்றுணர்வு நமக்குப் போதாமலாகி விட்டிருக்கிறது.

உங்களுக்கு அரசியல், வரலாறு, பொருளாதாரம் என்று எந்த உணர்வும் போதாமல் போனதுதானே பிரச்சினை. வக்கிரம் மட்டும்தானே ஸ்டாக்கில் உள்ளது!

நம் சமூக அமைப்பே ஊழலுக்கு ஆதரவான மனநிலைகொண்டது. ஆக, கள்ளப்பணம் அரசின் பிழையால் உருவாகி நீடிப்பது அல்ல. நம் பொருளியல் ஒழுக்கமின்மையின் விளைவு அது

அந்த சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கத்தில்தானே இப்படி பக்கம் பக்கமாய் மடல் தீட்டி உள்ளீர்கள்!

பெரும்பாலான கள்ளப்பணம் நோட்டுகளாகவே பதுக்கப்படலாயிற்று. அது ஆபத்தற்றது, வெளியே தெரியாதது. எப்போதுவேண்டுமென்றாலும் வெளியே எடுத்து புழக்கத்திற்கு விடப்படவேண்டியது.

நோட்டுக்களில் மிகப்பெரும்பகுதி இப்படித் தேங்கும் சூழல் என்பது பொருளியலுக்கு மிகப்பெரிய அடி. முதலீட்டுத்தேக்கம் உருவாகி தொழில்வளர்ச்சி மூச்சுத்திணறுகிறது. சென்ற இரண்டாண்டுகளாக மிக முக்கியமான தொழிலதிபர்கள் பலர் இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம். நான்கு வெவ்வேறு பொருளியல் நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன்.

கள்ளப்பணத்தில் பெரும்பகுதியை நீங்கள் நோட்டுக்களில்தான் பதுக்கி உள்ளீர்கள் போலும். உங்கள் நண்பர்களும் அப்படித்தானா? அதைத்தான் பொதுவாகச் சொல்கிறீரோ?

இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது. அப்போது சோறில்லாதவர்களுக்கு வங்கிக்கணக்கா?’ என நம் அறிவுஜீவுகள் கிண்டலடித்தனர். அவர்களே இன்று ஏழைக்கு வங்கிக்கணக்கு ஏது?’ என பாட்டுபாடுகிறார்கள்

இன்னும் கூட முப்பது சதவிகித மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது என்று நிதி அமைச்சகம் சொன்னது உம்ம கண்ணுக்கு படலியோ? அவங்க எங்க போய் பணத்தை மாத்துவாங்க?

இடதுசாரி அரசுகளே இத்தகைய நடவடிக்கைகளைச் செய்யத் துணியும். அதை ஓர் வலதுசாரி அரசு செய்திருப்பது ஆச்சரியம். அதை இடதுசாரிகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பது பேராச்சரியம்.

இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது யாரென்று இன்னமும் புரியவில்லை என்றால் உங்களை விட மண்ணாங்கட்டி யாரும் கிடையாது.


யார் வரிகட்டுகிறார்களோ அவர்களுக்கே மேலும் வரி என்பதுதானே? மாதச்சம்பளக்காரர்கள், நுகர்வோர் இரு சாராரும் கட்டும் வரியில்தான் நாடே ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அரசுகள் அவர்கள் மேலேயே மேலும் வரிகளைச் சுமத்திக்கொண்டிருந்தன.

அதைத்தான் நாங்கள் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். முதலாளிகளுக்கான கார்ப்பரேட் வரி, லொட்டு லொசுக்கு எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டே எங்களை ஏன்யா தாலியறுக்கறே என்று கேட்கிறோம்.

எளிய மக்கள்ஒருநாளுக்கு 2000 ரூபாய்தானே எடுக்கமுடியும் என கண்ணீர்விடுகிறார்கள். சமகால அறிவுலகின் ஆகப்பெரிய கேவலம் என இந்த நீலிக்கண்ணீரைத்தான் நான் காண்கிறேன்.

அந்த இரண்டாயிரம் ரூபாய் கூட எடுக்கக் கூட மை வைத்து அசிங்கப்படுத்துகிறார்களே? அதைப்பற்றி உங்கள் பேனா எழுதாதா?  எளிய மக்களுக்கு இரண்டாயிரத்துக்கு மேல் எதுக்கு என்று நீங்கள் கேட்கிறீர்களா?

.வங்கியில் போட்ட பணத்தில் இருந்து செல்லும் நோட்டாக எடுத்துக்கொடுத்தால் 30 சதவீதம் கமிஷன் என்கிறார்கள் நாகர்கோயிலில். நாற்பது என்கிறார்கள் கோவையில். எத்தனை பெரிய பொருளியல் அசைவு இது.


மோடியின் மூடத்தனத்தால் உருவாகிற புதிய கருப்புப் பணம் இது. இது உமக்கு பெரிய பொருளியல் அசைவா? மோடியை ஆதரிக்கும் வெறி அறிவை மறைத்து விட்ட்தோ?

இந்தத் திட்டத்தை வசைபாடுபவர்கள் மூன்று சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டுநாள் நிற்கநேர்ந்தமையாலேயே சலித்துக்கொள்ளும் நடுத்தரவர்க்கக்காரர். ஊடகம் உருவாக்கும் மாயையை நம்பும் அப்பாவிகள்

இந்த மூடத்தனத்தை ஆதரிப்பவர்கள் இரண்டு வகை. ஒன்று அயோக்கியர்கள். இரண்டாவது அடி முட்டாள்கள். நீங்கள் எந்த வகை ஆசானே?

கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவரும் தன் நோக்கத்தை சொல்லி அவர் பதவிக்கு வந்தார். அதைச் செய்கிறார். இங்கிருக்கும் மாபெரும் கருப்புப் பொருளியலை ஒழிப்பேன் என்று சொல்லியிருந்தால் அவர் பதவிக்கே வந்திருக்கமுடியாது.

அப்படி சொல்லியிருந்தா அதானி ஏரோப்ளேன் கொடுத்திருக்க மாட்டான். பெரிய முதலாளிங்க நிதி கொடுத்திருக்க மாட்டானுங்க. அதை சொல்ல மாட்டியா சாரே?

வெளிநாட்டுக் கள்ளப்பணத்தைப்பற்றி மட்டும் பேச ஏன் விழைகிறோம்? அது அங்கேஎங்கோ இருக்கிறது.

பெரும்பாலான கள்ளப்பணம் அங்கேதான்யா இருக்கு. அதைப் பத்தி பேசாம என் பாட்டி சுருக்குப்பையில கருப்புப் பணத்தை தேடிக்கிட்டு இருக்கீங்க,

துபாய் எங்க இருக்கு என்று பார்த்திபன் கேட்ட கேள்விக்கு வடிவேல் பதில் சொன்ன பாணியிலியே அது அங்கேஎங்கோ இருக்கிறது என்று சொன்னதைப் படித்து  உண்மையிலேயே மனம் விட்டு சிரித்தேன்.

போதிய முன்னேற்பாடுகள் என்றால் என்ன? அனைத்து வங்கிகளிலும் நோட்டுக்கட்டுகளை முன்னரே கொண்டுவந்து குவிப்பதா? ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி அமைப்பதா? அவற்றைச் செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்? இதைப்பேசுபவர்களுக்கு மண்டைக்குள் உண்மையில் என்னதான் இருக்கிறது? கொழுப்பா களிமண்ணா?

அதை செய்யாததால்தான் லட்சக்கணக்கானவர்களின் பிழைப்பு கெட்டு போச்சு. இதை கேட்டா எகத்தாளமா? உம்ம மண்டையில இருக்கறதை ஏன்யா அடுத்தவங்களுக்கு இருக்கிறதா சொல்ற?

நடவடிக்கை ஆரம்பித்தநாள் நான் மும்பையில் இருந்தேன். மறுநாளே 2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர் இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.

பார்வதிபுரத்தில உங்க வீட்டுல தனியா ஒரு ஏ.டி.எம் இருக்கா என்ன? வேலூருக்கு வந்து பாருங்க.

ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள்பத்திரிகையில் ஒரு கட்டுரை. மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று. என்னதான் உத்தேசிக்கிறார்கள்?

உங்கள் முன்னாள்  எதிரியும் தற்போதயை புதிய சகாவுமான சாரு எழுதாத மஞ்சள் பத்திரிக்கை சமாச்சாரங்களா? கலவரம் வரும்னு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லிட்டாங்களே, அவங்க தீர்ப்பும் மஞ்சள் பத்திரிக்கைதானா?


இதுவரை வந்த அழிவுகள்என்ன? வரிசையில் சிலர் மயங்கி விழுந்தார்களாம். நாற்பது பேர் செத்துப் போனார்கள் என்று கணக்கு. அவர்களின் உடல்நிலை என்ன, அவர்கள் எங்கே ஏன் இறந்தார்கள் எதுவும் தெரியாது.

எஸ்.வி.சேகர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரை விடவும் இரக்கம் இன்றி பேச ஆள் இருக்கு. ஒரே கட்சியில எத்தனை பேருய்யா கிளம்பி இருக்கீங்க?  

ஓர் ஆஸ்பத்திரியில் பழையநோட்டை எடுக்கமுடியாமல் குழந்தை இறந்ததாம். மோடி கொலைகாரா என கண்ணீர்க்குரல். முதலில் அந்த ஆஸ்பத்திரிமேல் அல்லவா நடவடிக்கை எடுக்கவேண்டும்? அங்கே அக்குழந்தைக்கு உதவாதவர்கள் அல்லவா பழிசுமக்கவேண்டும்?

செல்லாது என்று சட்டம் போட்ட் மோடி உத்தமரு. அதை அமலாக்கினவன் அயோக்கியன். இதுதாம்பா காவி நீதி

அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களை தொடங்கி நாட்டை பலமுறை ஸ்தம்பிக்க வைத்தவர்கள்.

பதினைந்து நாள் நோட்டீஸ் கொடுத்துத்தான் வேலை நிறுத்தம் செய்ய முடியும். சமீபத்தில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற்ற ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த்திற்கு மார்ச் மாதமே அறைகூவல் கொடுக்கப் பட்டது தெரியுமா ஜெமோ?

அத்துடன் மக்களை தங்கள் கருவிகளாகப் பயன்படுத்தி கருப்புப்பணத்தை நோட்டுகளாக ஆக்க களமிறங்கினர் வணிகர்கள். அதன்விளைவே நெரிசல் நீடித்தது. மக்களின் அவதியை பற்றிப்பேசிய எந்த ஊடகமும் இந்த உண்மையைச் சொல்லவில்லை.

மோடியும் ஜெய்ட்லியும் பேசிய அதே அயோக்கியத்தனமான வாதத்தை அப்படியே வாந்தி எடுத்துள்ள ஜெமோவே குஜராத்தில் ஒரு பாட்டி வந்து வரிசையில் நின்றார்களே, அவர்களும் அது போன்ற கூலிதானா?

மக்கள்மேல் அக்கறை இருந்தால் உண்மையைச்   சொல்லியிருக்க வேண்டும். எங்குமே பணமில்லை என்னும் பீதியைக் கிளப்பியிருக்கக்கூடாது.

சரி, இப்ப எங்க பணம் இருக்கு? அதை சொல்லுங்க. கிடைக்கிற 2000 ரூபாய் நோட்டு கூட இன்னிக்கு செல்லாக்காசுதான்.  

ஒரு வயதான பாட்டி இரு ஐநூறு ரூபாய்களை வைத்துக்கொண்டு அவை செல்லாமலாகிவிட்டன என அழுகிறாள். அதை படம்பிடித்து ஏழைகள் மேல் மோடியின் போர்என ஒரு இணையப்பிரச்சாரம் நடந்தது. ஒரு தபால்நிலையத்திற்குச் சென்று ஒருமணிநேரத்தில் அதை நூறுரூபாயாக ஆக்கியிருக்கலாம், ஒருவாரம் பொறுத்தால் பத்துநிமிடம்தான் ஆகும் அதற்கு என அந்தப்பாட்டிக்குச் சொல்லவில்லை எவரும். மாறாக அதை கிட்டத்தட்ட முப்பதுலட்சம் பேர் பகிர்ந்துகொண்டனர்.

ஏழைகள் மேல் இல்லாமல் அம்பானி, அதானி மேலயா போர் நடந்தது? “எல்லையில் ராணுவ வீரர்கள்” என்ற பிரச்சாரத்தை வேறு வார்த்தைகளில் சொல்கிறீர்கள். ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்ன நடிகர் விஜயை “நீ போய் உதவி செய்” என்ற பாஜக குரல் ஒலிக்கிறது. விமர்சனம் கூடாது என்றால்  உங்க தொழிலே முடங்கிடுமே? அத்தனை படைப்பாளிகளையும் காயப்படுத்தும் முன் இந்த உபதேசம் எல்லாம் நினைவுக்கு வராதோ?

இத்தனையையும் மீறி வெறும் ஒருவாரத்தில் எங்கும் நிலைமை சீரடைகிறது. ஆனால் ஊடகங்களுக்கு போதவில்லை. நிலைமை கட்டுமீறுகிறது என ஓலமிடுகின்றன. சமஸ் தி ஹிந்து நாளிதழில் மாபெரும் பொருளியல் அழிவை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறதுஎன்கிறார். அதாவது கறுப்புப்பணம்தான் பொருளியலாம் .

பழைய பணத்தை கமிஷன் வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுப்பது ஒரு பெரிய பொருளியல்  என்று மூன்று பத்திகளுக்கு முன்பு நீங்கள்தானே சொன்னீர்கள்.

பெட்டிக்கடைகளுக்கும் காய்கறிக் கடைகளுக்கும் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் கூலி வாங்குகிற தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய பணம் முடங்கிப் போனால் அதுவே பெரிய இழப்புதான். அப்படிப்பட்ட மக்கள்தான் கோடிக்கணக்கில் உள்ளார்கள். அவர்களின் பணச் சுழற்சி பாதிக்கப்பட்டால் அது பொருளாதாரத்திற்கு மாபெரும் அழிவை உண்டாக்கும் என்பது உங்களைப் போன்ற விஜய் மல்லய்யா ரசிகருக்கு எப்படி புரியும்?

.பெருமுதலைகளை விட்டுவிட்டு சிறுவணிகர்களைப் பிடிக்கிறதே அரசு, இது பிழை அல்லவா?

இது எப்போதும் நிகழும் ஒரு பெரிய மோசடிவாதம். கோடானுகோடிக் கணக்கில் வரி ஏய்ப்புசெய்யும் கோடிக்கணக்கானவர்கள் மேல் ஒரு சிறுநடவடிக்கை வருகிறது. அதற்கும் மேலே சிலரைச் சுட்டிக்காட்டி முதலில் அவர்களைப்பிடி எனச்சொல்லி வாதிட்டு இவர்களை நியாயப்படுத்துகிறார்கள். இந்த வாதத்தின் நோக்கம் கள்ளப்பணத்தை ஆதரிப்பது மட்டுமே, வேறேதுமல்ல

கள்ளப்பணத்தை உருவாக்குவதில் முக்கிய காரணியாக இருப்பவர்கள் யார் என்று கூட தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிற நீங்கள் இப்போது பேசுவதற்குப் பெயர்தான் மோசடிவாதம். உண்மையில் நீங்கள்தான் கருப்புப்பண முதலைகளை ஆதரித்துக் கொண்டுள்ளீர்கள்.

முதலாளித்துவப் பொருளியல் அமைப்பில் உற்பத்தி, சேவைத்துறைகளில் பெருமுதலாளிகளின் முதலீடும் பங்களிப்பும் மிகமிக முக்கியமானவை. அவற்றை காப்பாற்றவே எந்த ஒரு முதலாளித்துவ அரசும் முயலும். ஏனென்றால் அவை பெருமுதலாளிகளால் நிர்வகிக்கப்பட்டாலும் தேசத்தின் கூட்டான செல்வம். அவர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல

இந்த வாதத்தைப் படித்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. யதார்த்தம் என்னவென்று தெரியாமல் உங்களை எல்லாம் யார் பொருளாதாரக் கட்டுரை எழுதச் சொன்னது? முட்டாள்தனமான உளறல் இது. தேசத்தின் சொத்துக்களை அவர்கள் கைப்பற்றுகிறார்கள். அதற்கு தரகு வேலை பார்க்கிறது அரசு.

வங்கிகள் வீழ்ச்சி அடைந்தபோது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்காக தனியார் வங்கிகளுக்கு சும்மா அளித்து அவற்றை காப்பாற்றியது. ஏனென்றால் வங்கிகளே அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை. அவை நலியவிடமுடியாது.

எத்தனை அமெரிக்க வங்கிகள் திவாலானது என்பதையும் பெயில் அவுட் என்ற பெயரில் அரசு அளித்த தொகை யாருடைய பாக்கெட்டுக்கு போனது என்பதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள். சரி அரசு நஷ்டத்தை அடைக்கும் என்றால் எதற்கு தனியார் கம்பெனிகள்? இவர்கள் தவறுக்கு, பேராசைக்கு வரி செலுத்துபவர்கள் பணத்தை கொடுக்க வேண்டுமா? உலகப் பொருளாதார நெருக்கடி ஏன் வந்தது என்றும்  ஒரு நகைச்சுவைக் கட்டுரை  எழுதுங்களேன்.

இந்த வசதிகளின் விளைவாகவே இந்தியப் பொருளியலில் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவுகளையே நாம் அனுபவிக்கிறோம். எண்பதுகளில் ஒவ்வொரு இளைஞனும் வாழ்க்கையில் குறைந்தது ஐந்தாண்டுக்காலத்தை வேலையில்லாமல் கழித்திருப்பான். அந்நிலை மாறியது.இன்று அடித்தள மக்களின் வாழ்க்கையில்கூட உணவுப்பஞ்சம் இல்லை. எண்பதுகளில் மூன்றுவேளை உணவென்பதே ஒரு பெரும் சொகுசு.

இப்போதும் அதே நிலைதான் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளாத நீங்கள் ஒரு எழுத்தாளர்  என்றால் உங்கள் எழுத்தில் உண்மை என்பது எப்படி இருக்கும்?

கிங்ஃபிஷர் நஷ்டம் அடைந்தது. விஜய் மல்லய்யா தலைமை வகித்த பொதுப்பங்கு நிறுவனம் அது. அதன் லாபத்தில் பெரும்பகுதி அவருக்குத்தான் சென்றிருக்கும் என்பதனால் நஷ்டத்துக்கும் அவர் பொறுப்புதான். ஆனால் அவர் இந்திய அரசை ஏமாற்றி மோசடி செய்து தப்பி ஓடிய அயோக்கியன் என ஊடகங்கள் காட்டுவதும், இந்திய அரசு அவருக்கு பணத்தைச் சும்மா அள்ளிக்கொடுத்தது என்று சொல்வதும் மூடத்தனத்தின் உச்சம்

இன்று நம் அரசும் வங்கிகளும் ஆற்றல் உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய தனியார்த்துறையை ஊக்குவிக்கின்றன. கடன் அளிக்கின்றன. அதில் பெரிய அளவிலான வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்தியப்பொருளியலின் ஆதாரமாக அது மாறிவருகிறது. மோடி அரசின் சாதனையாக அது சொல்லப்படுகிறது

ஆனால் அந்த தொழிலதிபர்களில் ஒருசிலர் தோல்வியடையக்கூடும். வாய்ப்புகளை கணிப்பதில் உள்ள பிழையால். அல்லது கண்ணுக்கே தெரியாத காரணங்களால். அதில் அரசுக்கு இழப்பும் ஏற்படக்கூடும்.

விஜய் மல்லய்யாவை விட்டுவிடவேண்டும் என்று சொல்லவில்லை. அவரை வங்கிகள் வரவழைக்கலாம். சாத்தியமான அளவுக்கு அவரிடமிருந்து பணத்தை மீட்கலாம். ஆனால் அவர் மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுப்போன தொழில்முனைவர். அவரை மோசடியாளராக வேட்டையாடும் ஓர் அரசு அதற்குப்பின் தொழில் முனைவோரை தன் இலக்குக்கு இழுக்கவே முடியாது.

எங்கள் மூத்த தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் Hired Pen pushers என்ற வார்த்தையை பயன்படுத்துவார். அதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. மிகப் பெரிய அயோக்கியத்தனமான வாதம் என்று ஒற்றை வரியில் உங்களை நிராகரிக்கிறேன். இந்த பிழைப்பிற்குப் பதிலாக நீங்கள் . . . . . . ( நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். அச்சலுகையை உங்களுக்கு அளிக்கிறேன்.

உற்பத்தி, உட்கட்டமைப்பு, அடிப்படைச் சேவைத் துறைகளில் பங்களிப்பாற்றும் பெருநிறுவனங்களுக்கும் சிறுவணிகர்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடுண்டு. அப்பெருநிறுவனங்களின் பெரும் முயற்சிகள் தோற்றுப்போகக்கூடும். அந்நஷ்டத்தில் அரசு பங்குசேரக்கூடும். சமீபமாக டாட்டா நிறுவனம் பெரும் கனவுத்திட்டம் ஒன்றின் தோல்வியால் துவண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அரசு உதவக்கூடும். அது வரிப்பணத்தைக் கொடுப்பது அல்ல. டாட்டா நம் பொருளியலின் அடித்தளங்களில் ஒன்று.

டாடாவுக்கு அரசு கொடுப்பது வரிப்பணம் இல்லையென்றால் அது மோடி டீ விற்று சேமித்த காசா? டாடா கனவு காண மற்றவர்கள் பாரம் சுமக்க வேண்டுமா? பெரு நிறுவனங்களோ, சிறு நிறுவனங்களோ, லாபத்தை அனுபவிப்பவர்கள்தான் நஷ்டத்தையும் சுமக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும்தான் இத்தேசத்தின் பொருளாதார அடிப்படையாக இருக்க முடியும். வணிகம் என்பதைத் தாண்டி சமூகப் பொறுப்பு என்பதை வேறு எந்த தனியாரிடமும் எதிர்பார்க்க முடியாது.

அதைச்சுட்டிக்காட்டி நாடெங்கும் வரி ஏய்ப்பு செய்து பொருளியலை ஸ்தம்பிக்கச்செய்து வரிகொடுப்பவர்களிடமே மேலும் வரிபோடச் செய்பவர்களை நியாயப்படுத்தும் குரல் எவரால் ஏன் எழுப்பப்படுகிறது?

கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு பற்றியும் அவை தள்ளுபடி செய்யப்பட்டுக் கொண்டே  இருப்பது பற்றியும் உங்களுக்கு தெரியாதா? சாமானியர்களை வதைத்து செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு எதிரானவர்கள் எழுப்பும் குரல் இது. உங்கள் காதுகளில் அது வேறு மாதிரி ஒலிக்கிறது என்றால்  உங்கள் மூளையைப் போல செவிகளும் பழுதுபட்டுள்ளது என்றுதான் அர்த்தம்.

மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே முயல்கிறார், அவர் செய்வது ஒவ்வொன்றும் குற்றம் என்னும் மனநிலை மிக அசிங்கமானது.

மோடி பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணியாக இருக்கையில் எல்லாவற்றையும் குற்றம் சொல்வதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது. மோடி எதைச் செய்தாலும் அதற்கு முட்டு கொடுப்பது, ஆதரிப்பது, திசை திருப்புவது என்ற உங்கள் மன நிலையை விட அசிங்கமான மன நிலை வேறு யாருக்காவது வாய்க்குமா? இதில் உங்களுக்குத்தான் முதல் பரிசு.

கடைசியாக ஒன்று. மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே வந்தவர் என்னும் வகையில் ஏராளமான கட்டுரைகளைக் காணநேர்ந்தது .ஒரு பத்தி வாசித்ததுமே கீழே பார்ப்பேன். எழுதியவர் எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதாரநிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால் கருத்தும்  உணர்ச்சியும் ஒன்றே.

மோடியின் அராஜகங்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகிற என் பெயர் எஸ்.ராமன். இதுவும் உங்களுக்கு இஸ்லாமியப் பெயராகத்தான் தெரிகிறதா?

ஏராளமான பெயர்களை சொல்ல முடியும் என்றாலும் நீங்கள் நன்கு அறிந்த ஒரு பெயரை மட்டும் சொல்கிறேன். அந்த பெயரைச் சொன்னால் உங்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பரவாயில்லை. உங்கள் எழுத்தால் எத்தனை பேருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்துள்ளது?

ஆதவன் தீட்சண்யா – இந்த பெயர் கூட இஸ்லாமிய பெயர்தானா?

மோடியை இஸ்லாமியர் வெறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது ஒரு பொருளியல் நடவடிக்கை. இதன்மேல் கொள்ளும் கருத்துகூட அந்த வெறுப்பால்தான் தீர்மானிக்கப்படவேண்டுமா என்ன? ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம் பேரில் நாலு பேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன? சரி, நான் மோடியை வெறுக்கிறேன், ஆனால் இந்தப் பொருளியல் நடவடிக்கையில் இன்னின்ன சாதக அம்சங்கள் உள்ளன என்று சொல்லலாமே. ஒருவர் கூடவா இருக்கமாட்டார்? அத்தனை சிந்தனைகளும் அடிப்படையான மதநோக்கில் இருந்துதான் வந்தாக வேண்டுமா?

இதோ, இங்கேதான் நீங்கள் உபதேசிக்கிற “அறம்” என்ற ஆடை அவிழ்ந்து நிர்வாணமாக நிற்கிறீர்கள். பிரிவினையைத் தூண்டி ரத்தம் சுவைக்க நினைக்கும் உங்களின் கோரமான நரிப் பல் தெரிகிறது. நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் எதிர்க்கையில் ஏதோ முஸ்லீம் மக்கள் மட்டும் எதிர்ப்பது போன்ற சித்திரத்தை உருவாக்குவது போன்ற மிகப் பெரிய அயோக்கியத்தனம், பொறுக்கித்தனம் எதுவுமில்லை. மத நோக்கில் மட்டும்தான் நீங்கள் மோடியை ஆதரிப்பதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. உங்களின் ஆபத்தான குணாம்சத்தை நீங்களே அம்பலப் படுத்திக் கொண்டு விட்டீர்கள். உங்களது அபத்தமான கட்டுரையை புறம் தள்ளிப் போகத்தான் நினைத்தேன். ஆனால் இந்த ஒரு கருத்துக்காகவே உருப்படியான வேலைகள் இருந்த போதிலும் என் நேரத்தை விரயம் செய்தேன்.  இவ்வளவு கேவலமான சிந்தனை படைத்தவர் என்பதை உலகம் இன்னும் ஒரு முறை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

ஆனால் இங்கு நடந்தது அதுவல்ல. இங்கு நடந்தது அந்த முயற்சி தோற்று அதன் விளைவாக இந்தியப் பொருளியல் அழிந்து அதன் பழியையும் அரசின் மேல் சுமத்த வேண்டும் என எதிர்தரப்பினர் கொண்ட கீழ்மை மிகுந்த வேகம். அதற்காக அவர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம், பீதிகிளப்பல். அந்த வெறியில் இந்தியாவை அழிக்கும் கறுப்புப்பணப் பொருளியலுக்கு ஆதரவாகவே நம் அறிவுஜீவிகள் களமிறங்கிய கீழ்மை.

இரண்டரை வருடங்களாக  ஆட்சி நடத்தியும் சின்னதாக ஒரு உருப்படியான நடவடிக்கை கூட எடுக்க துப்பில்லாமல், வெற்று முழக்கங்களோடு உலகம் சுற்றும் வாலிபனாக ஊதாரித்தனம் செய்யும் ஒரு பிரதம மந்திரி, தன் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்ப எடுத்த அராஜக நடவடிக்கை என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் முட்டுக் கொடுக்கிற கீழ்மையை செய்வது நீங்கள்தான். இன்னும் கூட தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என மோடி தொடர்ந்தால் அதுதான் இந்தியாவை அழிக்கும். மோடியைக் காட்டிலும் மிகப் பெரிய அழிவு சக்தி இந்தியாவில் இருக்கிறதா?

அதில் இடதுசாரிகள் ஈடுபட்டமை மிக மிக வருத்தம் தரக்கூடியது. இடதுசாரிகளின் இந்தச் சரிவு ஒரு பெரும் அறவீழ்ச்சி.

மோடியின்  அராஜகத்திற்கு எதிராக மிகப் பெரிய இயக்கத்தை தொடங்கி உறுதியோடு நடத்தி வருவதற்காக இடதுசாரிகள் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர். உண்மையாகவே கருப்புப்பணம் வைத்திருக்கிற முதலைகளுக்கு எதிரான நிஜமான தாக்குதல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியதை யுட்யூபில் பார்க்க முடியும். அந்த உரையின் தமிழாக்கம் வந்து கொண்டிருக்கிறது. ஐந்து ரூபாய்தான் விலை. உங்களுக்காக நானே என் கைகாசு போட்டு (இப்போதுள்ள நிலைமையில் ஐந்து ரூபாய் சில்லறை கூட எனக்கு முக்கியம். இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒரு வாரமாக என்னால் மாற்ற முடியவில்லை. நேற்று ஒரு இரண்டாயிரம் ரூபாயை தகராறு செய்து மாற்றினேன் என்பது வேறு விஷயம்) வாங்கி அனுப்புகிறேன். அதை படித்தால் உங்களுக்கு தெளிந்து விடும் என்ற மூட நம்பிக்கையெல்லாம் எனக்கு கிடையாது. இந்த உரைக்கு பதில் சொல்ல பயந்துதான் மோடி பம்மி, பதுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தால் போதும்.

நிற்க, நாங்கள் செய்வது தவறு என்று நீங்கள் சொன்னால் நாங்கள் சரியான திசை வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். தாங்க்ஸ் வாத்தியாரே.

அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

அதான் பக்கம் பக்கமா எழுதித் தள்ளீட்டிங்களே!. இதுக்கும் மேலயா? வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமெனில் “முடியல” .

ஆனால் முடிக்கும் முன்பாக நான் ஒன்று சொல்ல வேண்டும்.

உங்களின் “பின் தொடரும் குரல்” படித்துத்தான் உங்கள் வாசகர்கள் விக்கிபீடியா பார்த்து லெனின் பற்றி அறிந்து கொண்டார்கள் என்று கதை விட்டவர் நீங்கள். லெனினுக்கே அந்த கதி என்றால் என்னைப் போன்ற சாமானியர்கள் நிலை என்ன?

எங்களுக்கு மார்க்ஸூம் தெரியும், லெனினும் தெரியும். கோட்சேயையும்  அறிவோம். சாவர்க்கரையும் அறிவோம். அவர்களின் நவீன அவதாரமான உங்களைப் பற்றியும் தெரியும்.

வரலாற்றில்  உங்களுக்கான இடம் என்ன  என்பது உங்களுக்கே தெரியும் என்றாலும் அதைச் சொல்கிற பொறுப்பை வரலாறு எனக்கு அளித்துள்ளது என்ற பெருமிதத்தோடு அதனை ஒரு படமாகவே தயாரித்துள்ளேன்.

அது கீழே உள்ளது, உங்கள் கீழ்மை புத்தியின் அடையாளமாய்.



பின் குறிப்பு :

இத்தோடு முடித்துக் கொள்வோம், வேறு வேலையைப் பார்க்கலாம் என்றால் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே! குமுதம் விளம்பரமும் சுஜாதா மனைவி சொன்னதை திரித்துள்ளதும் மீண்டும் வசை பாட அழைக்கிறதே.