Thursday, January 12, 2017

இடையில் யார் இந்த மோடி?




பொங்கல் விடுமுறை பிரச்சினை தீர்ந்து விட்டது. ஒரு வேளை ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குக் கூட தீர்வு வரலாம்.

ஆனால் பணப் பிரச்சினை?

மூடப்பட்ட ஏ.டி.எம் களும் அபூர்வமாய் திறந்து இருக்கும் ஏ.டி.எம் முன்பான நீண்ட வரிசைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ செலவுகள் காத்துக் கிடந்தாலும் அதற்கான பணம், உழைத்துச் சேர்த்த பணம், ஒரு மூடனின் மூர்க்கத்தால் வங்கிக் கணக்கில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

பொங்கலைக் கொண்டாட பணம் வேண்டும். அதை கொடுக்கச் சொல்லுங்கள். 

அது மோடியின் அப்பன் வீட்டு சொத்தா? ஒரு வாரத்துக்கு எவ்வளவு எடுக்க வேண்டும் என அவர் நிபந்தனை போட.

என் பொங்கல், என் பணம், என் உரிமை.

இடையில் மோடிக்கென்ன வேலை?  

2 comments:

  1. நியாயமாக உழைத்து சேர்த்த சொந்த பணத்தை எடுப்பதற்கு நிபந்தனை போடுவதை ஏற்க முடியாது.
    //ஒரு வேளை ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குக் கூட தீர்வு வரலாம்.//
    அப்படி வந்தால் மாட்டோடு சண்டை போட்டு வீரம் காட்ட வேண்டுமென்று போராடுபவர்களுக்கு, பின்பு நாட்டில் போராட எந்த பிரச்சனைகளும் கிடையாது.

    ReplyDelete