Thursday, February 16, 2017

பன்னீருக்கு எழுதிய அதே கவிதை

சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து ஜெ உள்ளே போய் பன்னீர் செல்வம் முதல்வரானபோது எழுதிய கவிதை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் பொருத்தமாக இருப்பதால் அதை இப்போது அவருக்கு சமர்ப்பிக்கிறேன். மீண்டும் என்ற ஒரு வார்த்தை மட்டும் புதிதாக இணைத்துள்ளேன்.





சிறைக்குள்ளேயிருந்து
போராட்டங்கள் நடந்துள்ளது,
காவியங்கள் எழுதப்பட்டுள்ளது,
பாடங்கள் புகட்டப்பட்டு
மனிதர்களாய் பலர் மாற்றப்பட்ட
வரலாறும் உண்டு.
மூலதனமும் கூட
மொழியாக்கம் கண்டதுண்டு.
கொலைகள் கூட
திட்டமிடப்பட்டதுண்டு.
இனி
பாதுகை சுமக்கும்
பரதன் ஒருவர் மூலம்
ரிமோட்டின் பொத்தான் கொண்டு
தமிழகமும் கூட
ஆட்சி செய்யப்படும்
மீண்டும்
சிறைக்குள்ளேயிருந்து....

பொருத்தமான கார்ட்டூனை பகிர்ந்து கொண்ட தோழர் பாலாஜி வெங்கட் ராமனுக்கு நன்றி
 

No comments:

Post a Comment