Saturday, February 11, 2017

அப்பல்லோ மாதிரி இழுத்தடிக்காதீங்க . . . .




சென்னையின் முதல் மர்மப் பிரதேசம் அப்பல்லோ மருத்துவமனை என்றால் அதற்கடுத்த மர்மப் பிரதேசமாக ஆளுனர் மாளிகை மாறியுள்ளது.

அப்பல்லோவில் 75 நாட்கள் இழுக்கடித்தார்கள். அங்கே வெளி நாட்டு டாக்டர்களை எல்லாம் வரவழைத்து சீன் போட்டார்கள்.  ஆளுனர் மாளிகையிலோ ஒரே கட்சியின் இரண்டு கோஷ்டிகள் சீன் போடுகின்றனர்,

அப்பல்லோவிற்கு பிரதாப் ரெட்டி என்றால் ஆளுனர் மாளிகைக்கு வித்யாசாகர் ராவ். 

பிரதாப் ரெட்டி யாருடைய கண்ணசைவிற்கு ஏற்ப அப்பல்லோவில் நடந்து கொண்டாரோ,  அவரையே அப்பல்லோவிற்கு செல்லும் அளவிற்கு ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகிறார் வித்யாசாகர் ராவ்.

ஐயா ஆளுனர் அவர்களே, நீங்களாவது அப்பல்லோ போல இப்பிரச்சினையை இழுத்தடிக்காமல் சட்டென்று ஒரு முடிவை எடுங்கள். எப்படியும் உங்களுக்கான உத்தரவு எப்போதோ  வந்திருக்கும். அதை அமலாக்குங்கள். அது அரசியல் சாசனப்படி சரியானதென்றால் பாராட்டுவோம். இல்லையென்றால் கழுவி கழுவி ஊற்றுவோம்.

எப்படியாக இருந்தாலும் உடனே அறிவியுங்கள். 

நாங்கள் மற்ற வேலைகளை பார்க்க வேண்டாமா? கூவாத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ க்களை விடுவிப்பது கிடக்கட்டும்.  இந்த நியூஸ் சேனல்கள் தொல்லையிலிருந்து முதலில் எங்களுக்கு விடுதலை  வாங்கிக் கொடுங்கள்.

No comments:

Post a Comment