Sunday, February 26, 2017

சபாஷ் பிரிதிவிராஜ், வேறு யார்???????





கேரள மாநிலத்தில் ஒரு நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைக்குப் பிறகு

நடிகர் பிரிதிவிராஜ்

தனது திரைப்படங்களில் பெண்களை கிண்டல் செய்தும் இழிவுபடுத்தியும் தான் நடித்த காட்சிகளுக்காக, பேசிய வசனங்களுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு திரைப்படங்களும் ஒரு  காரணமாக இருப்பதை தான் உணர்வதாகவும் இனி தான் நடிக்கும் படங்களில் பெண்களை இழிவுபடுத்துகிற காட்சிகளோ, வசனமோ கண்டிப்பாக இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த முடிவு உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது, நல்லதொரு முன்னுதாரணமாக மற்ற திரைக்கலைஞர்களும் பின்பற்ற வேண்டியது. அடுத்து யார் இவ்வாறு அறிவிக்கப் போகிறார்கள் என்றரிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

சபாஷ் பிரிதிவிராஜ். 

பின் குறிப்பு : தங்கள் துறையைச் சேர்ந்தவர் ஒருவர் தாக்குதலுக்கு உட்பட்டால்தான் இதெல்லாம் இவர்களுக்கு புரிகிறதா என்ற கேள்வி எழலாம். இப்போதாவது வந்திருக்கிறதே என்று மகிழ்ச்சியடையுங்கள்.
 

No comments:

Post a Comment