Saturday, June 17, 2017

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை தடை செய்




இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அவர்கள் வலுவாக இருக்கும் இடங்களில் நேரடியாக கலவரங்களைத் தூண்டி நூற்றுக்கணக்கானவர்களை கொல்வார்கள். குஜராத் தொடங்கி முசாபர்நகர் வரை நடைபெற்ற கொலைகள் இதற்கு உதாரணம்.

அவர்கள் வலுவில்லாத இடங்களில் மத வெறியை தூண்டி விடுவார்கள். வேறு ஏதாவது பிரச்சினையில் அவர்கள் குண்டர்கள் செத்துப் போயிருந்தாலும் கூட சிறுபான்மையினர் மீது பழி போட்டு கலவரம் செய்வார்கள். அண்டா பிரியாணியையும் மொபைல் கடை சூறையாடலும் நடந்த சசிகுமார் கலவரம் உதாரணம்.

வீரர்கள் போல சமூக வலைத்தளங்களில் உலா வந்தாலும் அடிப்படையில் அவர்கள் கேவலமான கோழைகள். தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் எங்கள் ஆட்கள் இல்லை என்று பதுங்குவார்கள்.

ஆளில்லாத சமயத்தில் வெடிகுண்டையோ பெட்ரோல் குண்டையோ வீசி விட்டு ஓடும் கோழைகள் என்பது இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் உணர்த்துகிறது. 

மிகப் பெரிய தீவிரவாதிகள்  நாட்டின் பிரதமராகவும்  ஆளும்கட்சியின் அகில இந்திய தலைவராகவும் இருக்கிற நாட்டில் தீவிரவாதச் செயல்கள் நடக்காமல் அமைதிப் புறாக்களா பறந்து கொண்டு இருக்கும்?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மீண்டும் தடை செய்ய வேண்டிய தருணம் இது.

 

No comments:

Post a Comment