Tuesday, June 20, 2017

சி.எம் மாய் ஒரு கயவன் . . .




உ.பி முதல்வராய் இருக்கிற போலிச்சாமியாரின் கொடும்பாவியை அஸ்ஸாம் மாநில ஆதிவாசி மாணவர்கள் சங்கம் ஞாயிற்றுக் கிழமை அன்று எரித்துள்ளது.

அந்த மனிதன் மீதும் அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் தொகுதி பாஜக எம்.பி ஆர்.பி,சர்மா என்பவன் மீதும் காவல்துறையில் புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது.

எதற்காக?



போலிச்சாமியாரின் முகநூல் பக்கத்தில் ஒரு பெண்ணின் நிர்வாணப் படம் வெளியாகிறது. ஒரு பெண்ணின் ஆடைகளை சில கயவர்கள் பொது வெளியில் களைந்து அசிங்கப்படுத்துகிறார்கள். அப்படத்தை வெளியிட்ட யோகியார், அச்சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்ததாகவும் மோடி வாழ்க என்றும் பாஜக வாழ்க என்றும் ஒரு இந்துப் பெண் சொன்னதற்காக காங்கிரஸ்காரர்கள் இவ்வாறு அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்றும் எழுதியுள்ளான். 

யோகியார் எழுதியதை ஆர்.பி.சர்மாவும் பகிர்ந்து கொண்டுள்ளான்.

நடந்தது என்ன?

அந்த சம்பவம் உண்மையா?

ஆம்

உண்மைதான்.

ஆனால் நடந்தது அஸ்ஸாமில்.

இப்போதல்ல.

பத்து வருடங்களுக்கு முன்பாக.

அஸ்ஸாமில் ஆதிவாசிகள் ஒரு பேரணி நடத்துகையில் ஆதிவாசிகளுக்கும் உள்ளூர்க்காரர்களுக்கும் இடையில் மோதல் நடக்கிறது. அதிலே சிக்கிக் கொண்ட ஒரு ஆதிவாசிப் பெண்ணை உள்ளூர்க்காரர்கள் இவ்வாறு அசிங்கப் படுத்தியுள்ளனர். அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. சொல்லப்போனால் பாஜக விற்கும் கூட தொடர்பு கிடையாது.

பத்து வருடம் முன்னாள் நடந்த ஒரு நிகழ்வின் படத்தை அதுவும் ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தை பொய்யானதொரு செய்தியோடு வெளியிடுவதை விட கயமைத்தனம் எதுவும் கிடையாது. 

அப்படிச் செய்கிறவனை கயவன் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

மோடியை விட பெரிய கேடியாக இருக்கிற யோகிக்கு இனி மரியாதை கிடையாது. அவனுக்கு பரிந்து கொண்டு யாராவது வந்தால் அவர்களுக்கும் கிடையாது.

ஒரு கட்சியில் சில அயோக்கியர்கள் இருக்கலாம்.
அயோக்கியர்கள் மட்டுமே இருக்கக் கூடிய கட்சி உலகிலேயே பாஜக மட்டுமே. 

பின் குறிப்பு : அது ஒரு போலி முக நூல் கணக்கு என்று சங்கிகள் சப்பைக்கட்டு கட்டலாம். போலிக் கணக்கினை 95,000 பேருக்கு மேல் பின்பற்றுவார்களா? போலிக்கணக்குகளும் அதைப் பயன்படுத்தி தில்லாலங்கடி வேலைகள் செய்வதிலும் அவர்கள் விற்பன்னர்கள் அல்லவா? இப்போது பிரச்சினை வந்ததற்குப் பின்பு அந்த முகநூல் கணக்கு மூடப்பட்டிருக்கலாம். போலியான ஒரு பக்கத்தை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பாஜக எம்.பி ஒரு முட்டாளா?

 

No comments:

Post a Comment