Tuesday, June 6, 2017

மூடர் கூட மோடி அரசு




முரடர்களும் மூடர்களும் மட்டுமே நிரம்பியது தனது அரசு என்பதை பெரும் மூடர் மோடி மீண்டும் ஒரு முறை மொக்கை காரணமொன்றை வைத்து என்.டி. டிவி மீது சி.பி.ஐ யை ஏவியதன் மூலம் நிரூபித்துள்ளார். 

தங்கள் கட்சியின் அநாகரீகப் பேர்வழியை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதற்கான பழி வாங்கல் நடவடிக்கை என்பதை சிறு குழந்தைகள் கூட புரிந்து கொண்டு எள்ளி நகையாடும் வண்ணம் அவசரம் அவசரமாக எதிர்வினையாற்றியுள்ளார்கள்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்கிறார்கள்!

இன்னும் கேவலமான குற்றச்சாட்டுக்கள் கூட வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். 

அப்படி செய்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் அவ்வளவு கேவலமான குணாம்சங்கள் கொண்டவர்களின் ஆட்சியில் எதுவும் நடக்கும்/ 

No comments:

Post a Comment