Tuesday, July 18, 2017

எஸ்.வி.சேகர் எடுத்ததன் பெயர் என்னவாம்?





வாய்க்கொழுப்பெடுத்த எஸ்.வி.சேகர், மீண்டும் ஒரு வக்கிர சிந்தனையை பரப்பி உள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில் முன்னால் தந்தை பெரியார் சிலை உள்ளதற்கு கோயில் முன்பாக பிச்சைக்காரர்கள் இருப்பார்கள் என்று நச்சைக் கக்கி உள்ளார்.

தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காவிகளின் தந்திரங்கள் தமிழகத்தில் எடுபடாமல் இருப்பதற்கு தந்தை பெரியார் இட்ட அடித்தளமே காரணம் என்ற எரிச்சலே இப்படி அநாகரீகமாக பேச வைத்துள்ளது.

எஸ்.வி.சேகர் தானெடுத்த பிச்சைகளை நினைவில் கொள்வது நலம்.

திரைப்படத்தில், நாடகங்களில் வாய்ப்புக்காக பிச்சை,
நாடக டிக்கெட்டுக்களை விற்பதற்காக பிச்சை
மகனுக்கு வாய்ப்பு தேடி பிச்சை
மயிலாப்பூர் தொகுதியில் சுயேட்சையாக ஓட்டு கேட்டு பிச்சை
அதிமுகவில் சீட்டு கேட்டு ஜெ விடம் பிச்சை
பிறகு ஓட்டு கேட்டு பிச்சை
இப்போது பாஜகவில் பதவிக்காக பிச்சை

என மாபெரும் பிச்சைக்காரனான எஸ்.வி.சேகர் அடுத்தவர்களை இழிவு படுத்தலாமா?

இவர்கள் போற்றும் சனாதன தர்மத்தின் படி அன்றாடம் உஞ்சவிருத்தி (அதாங்க பிச்சை) எடுத்து அதிலே கிடைக்கும் அரிசியை வைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

அந்த தர்மப்படி எஸ்.வி.சேகர் நடந்து கொண்டிருந்தால் அதற்கு என்ன பெயர்?

பிச்சைபுகினும் கற்கை நன்றே என்று ஔவைப் பாட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. தம்பி சிப்பு சேகரு, பிச்சையெடுத்தாவது அறிவை வளர்த்துக் கொள். அப்போதாவது இப்படி திமிரோடு பேசுவது குறைகிறதா என்று பார்ப்போம். 

 

No comments:

Post a Comment