Tuesday, July 4, 2017

இது அசிங்கம் கிரண் பேடி




இந்தியாவின் மூதல் பெண் ஐ.பி.எஸ்  அதிகாரி என்று பெருமையாய் உங்களை மதித்திருக்கிறேன்.

சர்வ வல்லமை படைத்த இந்திரா காந்தியின் காரையே கிரேனில் இழுத்துச்சென்ற போது "இதுதாண்டா போலீஸ்" என்று வியந்திருக்கிறேன்.

திஹார் சிறைச்சாலையை சீர்திருத்தும் முயற்சியை மனமாற பாராட்டியும் இருக்கிறேன்.

அன்னா ஹசாரே எனும் நாடகக்காரர் "ஊழலுக்கு எதிரான போராட்டம்" என்ற  டைட்டிலில் நடத்திய நாடகத்தில் நீங்களும் ஒரு வேஷம் போட்டீர்களோ, அப்போதுதான்  முதல் நெருடல் எழுந்தது. 

டெல்லி தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் பதவி எனும் மோகத்தால் ஈர்க்கப்பட்டு பாஜக எனும் கழிவு நீர்க் குட்டையில் குதித்த போது நொந்தே போனேன்.

பூவோடு சேர்ந்த நார் மணக்கும் என்ற சொலவடை உள்ள இந்த தேசத்தில் பன்றியோடு சேர்ந்த கன்றும் கழிவைத் தின்னும் என்றும் சொல்வார்கள். 

நீங்கள் இரண்டாவது சொலவடைக்கு உதாரணமா அல்லது  உங்கள் பாஜக அடையாளத்தை பணியிலிருந்த போது ஒளித்து வைத்திருந்தீர்களா என்பதுதான் தெரியவில்லை.

துணை நிலை ஆளுனர் என்று உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு ஜனநாயகத்திற்கு சவாலை உருவாக்கினீர்கள். 

பாஜக உங்களுக்கு அளித்த பரிசுக்கு பதில் மொய்யாக "பாஜக கட்சியின் பிரமுகர்களுக்கு நியமன எம்.எல்.ஏ பதவி கொடுத்து ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தியுள்ளீர்கள்.

இது அசிங்கத்திலும் அசிங்கம், கேடு கெட்ட அசிங்கம். 

இனி நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என்றெல்லாம் பேசாதீர்கள். அது இன்னும் அசிங்கமாக இருக்கும்.

பின் குறிப்பு : இப்படி கொல்லைப்புற வழியாக பதவிகளை பிடிப்பதற்குப் பதிலாக பிஜேபி காரர்கள் பிச்சை எடுக்கலாம். அது இதை விட கௌரவமாக இருக்கும்

 

 

No comments:

Post a Comment