Friday, July 7, 2017

கோமாதாவை கொன்னுட்டியே, அமீத்து


அமித் ஷா வகையறாக்கள் ஒரிஸாவில் வலம் போன போது அவர்கள் சென்ற வாகனத்தில் ஒன்று ஒரு பசுவின் மீது மோதி படுகாயம் ஏற்படுத்தி விட்டது.

விபத்து ஏற்படுவது எதிர்பாராமல் நிகழக்கூடியது. ஆனால் இவர்கள் தெய்வமாக வழிபடுவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற ஒரு பசுவின் மீது மோதிய பின்பு, அது செத்தால் சாகட்டும் என்று கண்டுகொள்ளாமல் போனதுதான் இங்கே விஷயம்.

அவர்களுக்கு பசுவின் மீதெல்லாம் எந்த பக்தியும் கிடையாது, வெறும் அரசியல் ஆதாயத்திற்காக போடுகின்ற இன்னொரு வேஷம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment